கீழப்பாவூர் ஒன்றியம் சென்னெல்தாபுதுக்குளத்தை சேர்ந்த மதிமுக மாநில சொத்து
பாதுகாப்பு குழு உறுப்பினர் விவி ராமசாமி. மற்றும் கீழப்பாவூர் திராவிட இயக்க
முன்னோடியும் நலிவுற்றோர் நலச்சங்க நிறுவனருமான பாவூர் நாவலர் ஆறுமுகநயினார்
ஆகியோர் உடல் நலக்குறைவு எற்பட்ட செய்தியை கேள்விப்பட்ட மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ
தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது. காவிரியில்
கர்நாடக அரசு ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்ட மதிப்பீடு செய்து மத்திய
அரசின் நீர்வள வள மையத்திடம் அனுமதி கோரியுள்ளது. மத்திய அரசும் இதற்கு
ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது. இது விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாக
கொண்டுள்ள தஞ்சை விவசாயிகளை மட்டுமல்லாது தமிழக விவசாயிகளை பெரிதும்
பாதிக்கும். 67.4.டி.எம்.சி தண்ணீர் இதில் தேக்கப் போகிறார்கள், பெருமழை
பெய்து வெள்ளம் வந்தாலும் கபினி,கிருஷ்ணசாகர்க்கு காவிரிக்கு ஒரு சொட்டு
தண்ணீர் கூடவராது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு விரோதமாக
செயல்படுகிறது ,தீர்ப்பாயங்களை கலைத்து விட்டு இனி ஒரே தீர்ப்பாயம் அமைப்பது
நமக்குத்தான் பெரும் நட்டமாகும் , ஒரே வரி,ஒரே நாடு என்கிறார் பிரதமர் மோடி
இதே போல் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின்
ஓ.என்.ஜிசி., நிறுவனம் மேலும் பல இடங்களில் எடுக்க முயற்சி செய்து வருகிறது.
உடனடியாக மக்களின் போரட்டத்திற்கு மதிப்பளித்து ஒஎன்ஜிசி நிறுவனம் வெளியேற
வேண்டும். கதிராமங்கலத்தில் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனே விடுதலை
செய்ய வேண்டும்.
உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழநெடுமாறன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில்
நானும் கலந்துகொள்கிறேன். சீமை கருவேல மரங்களால் நமது மண் வளம் முற்றிலும்
குறைந்து விட்டது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை
எடுக்கப்பட்டது. அதற்கு தற்கால தடை உள்ளது. இந்த வழக்கில் நானே வாதாடி
தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றாமல் ஓய மாட்டேன்.
தமிழகதிற்கு எவையெல்லாம் ஆபத்து தருகிறதோ அதற்கெல்லாம் அதை தடுப்பதற்கு நான்
போராடுவேன்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்திற்க்குள்
மீத்தேனை உள்ளே விடமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்தார் ,அப்படி ஒரு
நிலைபாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும் . இதனை தடுக்க தனது கடமையிலிருந்து
தமிழக அரசு தவறக்கூடாது.
கூடன்குளத்தில் அனு உலை ஒன்று இரண்டே ஒழுங்காக வேலை செய்யவில்லை இந்நிலையில்
முன்று, நான்கு, ஐந்து, ஆறு, என அனு உலை பூங்கா என்ற திட்டத்தோடு தொடர்ச்சியாக
அனு உலைகளை நிறுவுவது பின்னாளில் நமக்கு பேராபத்தை ஏற்படுத்தும். ஓரே நாடு
ஒன்றுபட்ட இந்தியா என்று முழங்கும் மோடியின் பிஜேபி அரசு தமிழகத்தை
பாலைவனமாகவும் சுடுகாடாகவும் மாற்றும் துரோக செயலை செய்து வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இராசேந்திரன், மாநகர் மாவட்ட
செயலாளர், நிஜாம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கல்லத்தியான் மாவட்ட பொருளாளர்
ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கீழப்பாவூர் இராம உதயசூரியன்,
மருதசாமிபாண்டியன், ஆறுமுகசாமி, புதூர் ஆறுமுகம், கொம்பையாபாண்டியன், தங்கம்,
வேதநாயகம், கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்அறிவழகன், கீழப்பாவூர்
திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மகளிரணி ராசாத்தி உட்பட பலர் கலந்து
கொண்டனா;.
முன்னதாக பாவூர் நாவலரை சந்தித்த வைகோ தனது தாயார் மறைவின் போது நாவலர்
அனுப்பிய இரங்கல் கடிதம் குறித்து நினைவு கூர்ந்தார் ,பின்னர் சிறையில்
இருக்கும் போது சங்கொலி நாளிதழுக்கு எழுதிய 7 கடிதங்களை தனது உதவியாளர்
அருணகிரி புத்தகமாக தொகுத்து வருவதாகவும் நாவலரிடம் தெரிவித்தார் மேலும்
ஆரம்பகாலம் தொட்டு அவரோடு பழகிய அரசியல் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் பின்னர்
வைகோவிற்கு கர்ம வீரர் காமராஜர் கவிதைகள் நூலைபாவூர் நாவலர் வழங்கினார்



