கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி

IMG 20170702 WA0071 - 2026
IMG 20170702 WA0069 - 2026

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவியில் உள்ள
தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ளது கும்பாவுருட்டி அருவி. குற்றாலம்
சீசன் காலங்களில் இந்த அருவியில் குளிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான
சுற்றுலா பயணிகள் கும்பாவுருட்டிக்கு வருவார்கள்.

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 16 பேர் ஒரு வாகனத்தில் குற்றாலம்
வந்தனர். அவர்கள் கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவிக்கு
குளிக்கச் சென்றனர்.

கும்பாவுருட்டி அருவியில் அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு பேர் எதிர்பாராத விதமாக பாறையில்
வழுக்கி அருவியின் உள்ள தடாகத்தில் விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும்
தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இறந்தவர்கள் தூத்துக்குடி காமராஜர்புரம் அழகுமுத்துநகரைச் சேர்ந்த பழனி மகன்
ராமச்சந்திரன் (வயது 31), தூத்துக்குடி முல்லைக்காடு கீழத் தெருவைச் சேர்ந்த
சக்திவேல் மகன் இசக்கிமுத்து (25) என தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் விரைந்து சென்று தடாகத்தில்
மூழ்கி இறந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு புனலூர் அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

இச்சம்பவத்தை அடுத்து கும்பாவுருட்டி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு
தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள வனத்துறைக்கு சொந்தமான இந்த அருவிப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
வைக்காததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories