“நாய்க்குப் போட்டாச்சா?”

“நாய்க்குப் போட்டாச்சா?”
(நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.——r”நாய்க்குப் போட்டாச்சா” என்பதுதான்.)

கட்டுரையாளர்;ரா.கணபதி.
(மஹா பெரியவாள் விருந்து)
தட்டச்சு;வரகூரான் நாராயணன். 18342371 194072067780111 6881321337149165462 n - 2026

நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும்.
ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகராக நமது
சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.

1927-ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத்
தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது.
தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம்
போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.

விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண
ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும்
உண்ண மறுத்தது.

ஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச்
சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய்,
ஒன்று அந்தப் பல்லக்கின் கீழேயே போகும்;
அல்லது யானையின் தூண் போன்ற நாலு
கால்களுக்கு உள்ளாகவே போகும்.பல்லக்கு
நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று
பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே
கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.

ஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதாகச்
சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம்
அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர்
தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் கயிற்றால்
பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.

அப்படியே அச் சேவகன் செய்து திரும்பினான்.

அவன் திரும்பும் முன்னரே பைரவனாரும்
திரும்பியிருந்தார்!. அவருக்கு வெறியில்லை
என்று தெரிந்தது.

அன்றிலிருந்து மஹா பெரியவாளைத்
தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய்
உயிர் பிரியம் வரையில் விரதம் காத்தது!

அக்காலத்தில் பிக்ஷை முடித்தபின் சிறிது
சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள்
தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும்
போது கேட்கும் முதற் கேள்வி.————-
“நாய்க்குப் போட்டாச்சா” என்பதுதான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories