“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

(   “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. )
18194655 1539007332811093 2764588660202570986 n - 2026

ஞாயிற்றுக்கிழமைகளில் சூர்ய அஸ்தமனத்துக்கு அப்புறம் உணவு அருந்தக் கூடாது என்பது பெரியவா உத்திரவு.

பெரியவாளே கூட, ஒருமுறை உடல்நிலை சரியில்லாத போது தொண்டர் கொடுத்த பாலை சூர்ய அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிட்டு விட்டார். ஆனால் அது தெரிந்ததும் அடுத்து வந்த ஒரு வாரம் சுத்த உபவாசம் இருந்தார்.

ஒரு ஞாயிற்றுகிழமை. இரவு பன்னண்டு மணி. தன் அணுக்கத் தொண்டரான ஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளை எழுப்பி தனியே அழைத்துக் கொண்டு போய் எசையனூரில் அவருடைய குடும்பம், வாய்க்காலில் தண்ணி வரத்து, தோட்டத்து செம்பருத்தி செடி என்று கனகாரியமாக எல்லாவற்றையும் விஜாரித்துவிட்டு, ” நேத்து ராத்திரி என்னடா ஆஹாரம் பண்ணினேள்?” என்றார்.

“ரவா உப்புமா” வேதபுரி சாஸ்த்ரிகள் பொய் சொல்லத் தெரியாதவர்.

கிழவனார் மேலும் கிண்டினார் ” யாரல்லாம் சாப்ட்டா?”

வரிசையாக எல்லார் பெயரையும் சொன்னார் வேதபுரி சாஸ்த்ரிகள்.

“சரி போ” படுத்துக் கொண்டுவிட்டார். வேதபுரி மாமாவை கூட்டி கொண்டு வந்த காரியம் ஆயாச்சு. மறுநாள் திங்கட்கிழமை கண்ணன் என்ற தொண்டர் வந்து நமஸ்காரம் பண்ணினார். பொதுவான விஷயங்களை பேசி விட்டு மெதுவாக ” நேத்து ராத்திரி என்ன ஆஹாரம் பண்ணினே?”  தெரியாதவர் மாதிரி ஒரு கேள்வி!

“நேத்து ஞாயித்துக்கிழமையாச்சே! ராத்திரி ஒண்ணும் சாப்பிடலை……….” என்றார் குழறியபடியே!

“ஏன் பொய் சொல்லறே? ரவா உப்புமா கெளறிக் குடுத்தானாமே வேதபுரி?” என்று பெரியவா கேட்கவில்லை. “பொய்” என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால், ரவா உப்புமா விவஹாரத்தை வேதபுரி எல்லாத் தொண்டர்களிடமும் சொல்லி, எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்து விட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories