தை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்!


suriyanar koil utsavar - 2026

அமாவாசை பௌர்ணமி இரண்டுமே சிவ பூசைக்கு மிகச் சிறந்த நாட்கள். தைப் பூசம் தை அமாவாசை தை ஞாயிறு ஆகியவை மிகச் சிறந்த நாட்கள்.

தை அமாவாசையை அடுத்து வரும் சப்தமி ரத சப்தமி என்று பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கல் போன்று இதுவும் சிப பக்தனான சூரியனை வழிபடும் நாள். ரத சப்தமி அன்றும் சர்க்கரைப் பொங்கலே முக்கிய நைவேத்தியம். நீராடும்போது எருக்கிலையோடு நீராடப்படும். கிழக்கே உதிக்கும் சூரியன் தெற்காகச் சென்று மேற்கே மறைதல் தட்சிணாயணம் எனப்படும். வடக்காகச் சென்று மறைதல் உத்தராயணம் எனப்படும்.

பத்தாவது ராசியான மகர ராசியில் சூரியன் நுழைவதால் மகர சங்கராந்தி எனப்படும் பத்தாவது மாதப் பிறப்பாகிய தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. மகர சங்கராந்தி என்றால் மகரத்தால் வரும் நன்மை என்று பொருள். இதுவே தமிழில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக உள்ளது.

suriyanar koil - 2026

* அருக்கனில் சோதி அமைத்தோன் (திருவாசகம்)
* நாட்டம் மூவரில் பெற்றவன் (திருக்கோவையார்)
*அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ (அப்பர்)
* அட்ட மூர்த்தி அழகன் (திருவாசகம்)
*மாலை எழுந்த மதியே போற்றி ——- காலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி (அப்பர்) – என பரமேஸ்வரனால் படைக்கப்பட்ட சோதியாகவும் , ஈசனது முக்கண்ணில் ஒரு கண்ணாகவும், பஞ்ச பூதம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய பரா பரனது எட்டுருவில் ஒரு உருவாகவும் பொலிவுறும் நெருப்புக் கோளமான சூரியனுக்கு அதிபதியான சூரிய தேவனது ஒரே ஒரு சக்கரம் கொண்ட தேர் ஏழாம் நாள் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இதனால் இதற்கு ரத சப்தமி என்று பெயர்.

தேர் வரைந்து பூசை செய்யப் படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேருக்குச் சக்கரம் ஒன்று, பாகனான அருணனுக்கோ கால்கள் இரண்டுமே இல்லை.

*புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித் தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் (சம்பந்தர் தேவாரம்)
*ஆழி ஒன்று ஈரடியும் இலன் பாகன் (மாணிக்க வாசகர், திருக்கோவையார்) – என்று திருமுறைகள் காட்டுகின்றன.

சூரிய தேவன் சிவ பூசை செய்து பரமேசுவரனது பேரருள் பெற்ற தலங்கள் பல. தஞ்சாவூருக்கு அருகே ஒரத்த நாடு பக்கம் உள்ள திருப்பரிதி நியமம் பரிதியப்பர் திருக்கோயில், சிதம்பரம் அருகே உள்ள திருவுச்சி (சிவபுரம்) உச்சி நாதேசுவரர் கோயில், திருவாரூர் அருகே உள்ள திருத்திலதைப்பதி மதிமுத்தர் கோயில் கும்ப கோணம் அருகே திருமங்கலக்குடி புராண வரதர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதர் கோயில் மற்றும் பலப் பல கோயில்கள் சூரிய தேவன் சிவ பூசை செய்து வரம் பெற்ற கோயில்கள்.

*சந்திரனொடு சூரியர் தாம் வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் (அப்பர்) – என சூரியனும் சந்திரனும் சிறந்த சிவபக்தர்கள் ஆதலால் பழைமையான எல்லா ஈசுவரன் கோயில்களிலும் திருமூலஸ்தான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே ஒரு புறம் சூரியனும் மறு புறம் சந்திரனும் இருப்பதைக் காணலாம்.

  • சிவப்பிரியா


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories