தை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்!


suriyanar koil utsavar - 2026

அமாவாசை பௌர்ணமி இரண்டுமே சிவ பூசைக்கு மிகச் சிறந்த நாட்கள். தைப் பூசம் தை அமாவாசை தை ஞாயிறு ஆகியவை மிகச் சிறந்த நாட்கள்.

தை அமாவாசையை அடுத்து வரும் சப்தமி ரத சப்தமி என்று பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கல் போன்று இதுவும் சிப பக்தனான சூரியனை வழிபடும் நாள். ரத சப்தமி அன்றும் சர்க்கரைப் பொங்கலே முக்கிய நைவேத்தியம். நீராடும்போது எருக்கிலையோடு நீராடப்படும். கிழக்கே உதிக்கும் சூரியன் தெற்காகச் சென்று மேற்கே மறைதல் தட்சிணாயணம் எனப்படும். வடக்காகச் சென்று மறைதல் உத்தராயணம் எனப்படும்.

பத்தாவது ராசியான மகர ராசியில் சூரியன் நுழைவதால் மகர சங்கராந்தி எனப்படும் பத்தாவது மாதப் பிறப்பாகிய தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. மகர சங்கராந்தி என்றால் மகரத்தால் வரும் நன்மை என்று பொருள். இதுவே தமிழில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக உள்ளது.

suriyanar koil - 2026

* அருக்கனில் சோதி அமைத்தோன் (திருவாசகம்)
* நாட்டம் மூவரில் பெற்றவன் (திருக்கோவையார்)
*அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ (அப்பர்)
* அட்ட மூர்த்தி அழகன் (திருவாசகம்)
*மாலை எழுந்த மதியே போற்றி ——- காலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி (அப்பர்) – என பரமேஸ்வரனால் படைக்கப்பட்ட சோதியாகவும் , ஈசனது முக்கண்ணில் ஒரு கண்ணாகவும், பஞ்ச பூதம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய பரா பரனது எட்டுருவில் ஒரு உருவாகவும் பொலிவுறும் நெருப்புக் கோளமான சூரியனுக்கு அதிபதியான சூரிய தேவனது ஒரே ஒரு சக்கரம் கொண்ட தேர் ஏழாம் நாள் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இதனால் இதற்கு ரத சப்தமி என்று பெயர்.

ALSO READ:  இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

தேர் வரைந்து பூசை செய்யப் படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேருக்குச் சக்கரம் ஒன்று, பாகனான அருணனுக்கோ கால்கள் இரண்டுமே இல்லை.

*புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித் தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் (சம்பந்தர் தேவாரம்)
*ஆழி ஒன்று ஈரடியும் இலன் பாகன் (மாணிக்க வாசகர், திருக்கோவையார்) – என்று திருமுறைகள் காட்டுகின்றன.

சூரிய தேவன் சிவ பூசை செய்து பரமேசுவரனது பேரருள் பெற்ற தலங்கள் பல. தஞ்சாவூருக்கு அருகே ஒரத்த நாடு பக்கம் உள்ள திருப்பரிதி நியமம் பரிதியப்பர் திருக்கோயில், சிதம்பரம் அருகே உள்ள திருவுச்சி (சிவபுரம்) உச்சி நாதேசுவரர் கோயில், திருவாரூர் அருகே உள்ள திருத்திலதைப்பதி மதிமுத்தர் கோயில் கும்ப கோணம் அருகே திருமங்கலக்குடி புராண வரதர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதர் கோயில் மற்றும் பலப் பல கோயில்கள் சூரிய தேவன் சிவ பூசை செய்து வரம் பெற்ற கோயில்கள்.

*சந்திரனொடு சூரியர் தாம் வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் (அப்பர்) – என சூரியனும் சந்திரனும் சிறந்த சிவபக்தர்கள் ஆதலால் பழைமையான எல்லா ஈசுவரன் கோயில்களிலும் திருமூலஸ்தான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே ஒரு புறம் சூரியனும் மறு புறம் சந்திரனும் இருப்பதைக் காணலாம்.

  • சிவப்பிரியா
ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories