தென்னிந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரதா ஆயுத பூஜை..

1771249 8th day pooja - 2026

தென்னிந்தியாவில் வேதபாராயண முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, இந்த ஆன்மீக விழா முக்கியமாக கர்நாடகாவில் தசரதா பண்டிகை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை மஹாநவமி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகைகளையும் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.  அந்த வகையில் தென்னிந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை, இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் திருவிழா தசராவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு மகா நவமி அக்டோபர் 4-ம் தேதி வருகிறது, அதைத் தொடர்ந்து தசரா அக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.  இந்த தினத்தில் நம் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள், இது சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. 

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதுவரை நமக்கு உதவிய உயிரற்ற பொருட்களை போற்றும் விதமாகவும் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுவது தான் ஆயுதபூஜை.  பொதுவாக இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் பெரும்பாலும் நமக்கு நாள்தோறும் உதவும் உயிருள்ள அல்லது உயிரற்றவற்றை போற்ற வேண்டும் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது.  நமக்கு போக்குவரத்து பயன்படும் வாகனங்களையும் இந்த தினத்தில் மக்கள் வழிபடுகின்றனர், வாகனங்களை கழுவி அதற்கு பூக்கள், சந்தனம், குங்குமம், மாலை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கின்றனர்.  அதேபோல வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி, வீட்டின் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம் போன்றவற்றை வைத்து வீட்டை அலங்கரிக்கின்றனர்.  

சிலர் திருஷ்டி கழிக்கும் விதமாக வெள்ளைப் பூசணிக்காயை மஞ்சளால் அலங்கரித்து வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குகின்றனர்.  சிறிய ஊசி தொடங்கி கத்தி, அரிவாள், சமயலறை கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த பண்டிகையை வடகிழக்கு மாநிலங்களில் மகா நவமி என்றும், ஒடிசாவில், அஸ்திர பூஜை என்றும் கொண்டாடுகின்றனர்.

images 38 - 2026
ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Topics

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories