February 11, 2025, 4:55 PM
30.4 C
Chennai

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு டிசம்பர் 16ல் திருபாவரணம் சார்த்தும் விழா, ஆராட்டு உற்சவம் டிசம்பர் 17முதல் ..

பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல் துவங்குவதையொட்டி டிசம்பர் 16ல் திருபாவரணம் ஐயனுக்கு சார்த்தும் விழா நடைபெறும்.உற்சவத்தை யொட்டி வரும் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை நடைபெறுகிறது..

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா மார்கழியில் நடைபெறுகிறது.. முதல் நாள் 16-12-22 வெள்ளிக்கிழமை அன்று திருஆபரணபெட்டி ஊர்வலம். 17-12-22 சனிக்கிழமை 1ம் திருவிழா அன்று திருகொடியேற்றம். தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்ஷவபலி பூஜை. 7,8 ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல். 9 ம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறும். மறுநாள் 27-12-22 அன்று மண்டல பூஜை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அச்சன்கோயில் மார்கழி ஆராட்டு உற்சவத்தில் முக்கிய விழாவாக ஒன்பதாம் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.கேரளாவில் இரு கோயில்களில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் கோயில், அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.

அச்சன்கோயில் மற்றொரு சிறப்பு சபரிமலை போல் இங்கும் சொர்ண கொடிமரத்தில் கொடியேற்றி பத்துநாள் ஆராட்டு உற்சவம் நடைபெறும்.கடைசி இருநாட்களில் பள்ளி வேட்டை ஆராட்டு நடைபெறும்.

அச்சன்கோயில் மற்றொரு முக்கிய சிறப்பு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க திருபாவரணங்கள் உள்ளது போல் அச்சன்கோவில் அரசனுக்கு தங்க திருபாவரணங்கள் எடையே சரியான அளவில் பார்க்க முடியாத தங்கவாள் மந்திரி கருப்பசாமிக்கு வெள்ளி திருபாவரணங்கள் உள்ளது சிறப்பம்சமாகும்.

உற்சவத்தில் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று காலை 10 மணி அளவில் ( பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து 10 இருந்து 11 மணிக்குள் ) விளக்கு வைத்தல் எனும் சுவாமி புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் வெளிபிரகாரத்தில் நிறுத்தப்பட்டு நடை அடைக்கபடும். மேல்சாந்தி ஸ்ரீகோவிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து உள்பிரகாரத்தில் அதற்கன அமைக்கபட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருள செய்வார்கள். அப்போது உள்பிரகாரத்தில் கோவில் பணியாளர்கள் உற்ஷவபலி பூஜை கட்டளைதாரர்கள் மற்றும் மிக முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். பின் மரபாணி கொட்டி எல்லா உப தெய்வங்களையும் அழைத்து சுவாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கபடும். மடபள்ளியில் பாகம் செய்யபட்ட அரிசி சாதத்தினால் படைத்து கொண்டே இருப்பார்கள்.. பின் தாந்தரிகம் மூலம் கேட்டு கேட்டு போதும் என்று வரும் வரை மீண்டும் மீண்டும் வைத்து கொண்டே இருப்பார்கள்.. இது சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடரும். பின் எல்லா தெய்வங்களுக்கும் படைத்து முடிந்ததும் வெளிபிரகாரத்தில் இருக்கும் பக்தர்களை உள்ளே அனுமதித்து.. சுவாமிக்கு தீபாரதணை நடைபெறும். பின் இதே போல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கு இதே போல் படைக்கபடும்.. தொடர்ந்து 3 மணி வரை 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கபட்டு கடைசியாக மூன்று சுற்று ஓடி தூவி படைத்து.. உற்ஷவபலி பூஜையை நிறைவு செய்து ஸ்ரீகோவில் நடை திறந்து சுவாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள்.

இந்த பூஜை மிகவும் விஷேசமான பூஜை ஆகும். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் தான் நடைபெறுகிறது. இந்த பூஜையை செய்வதும், இந்த பூஜையில் கலந்து கொள்வதும், இந்த பூஜையை பார்ப்பதும் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அந்த ஒரே நாளில் அந்த ஒரே பூஜையில் ஐயப்பன் உட்பட அனைத்து தெய்வங்களையும் அழைத்து நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை செய்வதால் எல்லா தெய்வங்களுக்கும் எல்லாம் படைத்து எல்லா பூஜைகளும் செய்ததாக ஐதீகம் நிலவுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories