கீழப்பாவூரில் ஏகதின தீர்த்தவாரி

Published:

தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் வருகிற 24.09.2015வியாழக்கிழமை புரட்டாசி திருவோண நட்சதித்திர நாளன்று ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவிருக்கிறது  கங்கைக்கு இணையாக போற்றப்படும் ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்  புரட்டாசி திருவோணநன் நாளில் ஏக தின தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தத்தை  தெளித்துக் கொண்டால் கங்கையில் நீரடிய பலன் கிடைக்குமமென சாஸ்த்ரங்களும் ஆகமங்களும் கூறுகின்றன இந்த சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நரஸிம்ஹபுஷ்கரணியில்(தெப்பகுளத்தில் ) அன்று காலை பெருமாள் எழுந்தருள்கிறார் காலை 7 மணியளவில் தெப்பகுளத்திற்க்கு வாஸ்த்து சாந்தி ,பிரவேச பலி ,சர்வ தோஷ ,நிவர்த்திக்காக புருஷசூக்த ஹோமம் ,கலசத்தில் வருண ஜெபம் ,கும்பாபிஷேகம் தொடர்ந்து பெருமாளுக்கு தெப்பகுளத்தில் வைத்து விசேஷ அபிஷேகங்களும் உற்சவ மூர்த்தியுடன் தீர்த்தவாரி நடைபெறும் ,பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் பிராசதம் விநியோகம்நடைபெறும் மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோவிலையும்,தெப்பக் குளத்தையும்தீர்த்த வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெ உள்ளது

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img