December 7, 2025, 4:19 AM
24.5 C
Chennai

திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: மணிவண்ணன்!

thirunamangal - 2025

2.மணி வண்ணன் திருநாமம்

-> மகர சடகோபன், தென்திருப்பேரை <-

நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-2 ல் தென்திருப்பேரை எம்பெருமானை “
“ தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ்* தெந்திருப்பேரெயில் வீற்றிருந்த* வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்* செங்கனிவாயின் திறத்ததுவே.”
என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

மணிவண்ணன் திருநாமம் காட்டும் தலைமைப் பண்புகள்

1.மணி போன்ற ரத்தினங்கள் விலை மதிப்பு உயர்ந்து இருந்தாலும், புடவைத் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி அடங்கியிருக்கும்.அதே போல் தலைவன் என்பவன் மதிப்பு புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் தொடர்புடையவர் என்ற எளிமையைப் பெற்றிருக்க வேண்டும். ( யசோதை உரலில் கயிறு கொண்டு கட்ட, கட்டுண்டு நின்றவன் என்பதன் மூலம் அவன் எளிமை உணரப்படுகிறது)

2.ரத்தினம் என்பது பார்ப்பதற்குப் பெருமிதத்தைத் தரும். அது பிறந்த இடமான மலையும் கடலும் பெருமிதத்துடன் இயற்கையில் தோன்றுபவையாக இருக்கின்றன. அந்த கடலும் மலைகளும் தன்னை அழித்துக் கொண்டு ரத்தினத்தை வெளிப்படுத்துகின்றன மக்களின் மகிழ்ச்சிக்காக என்பதுதான் உண்மை. அதே போல் தலைவன் என்பவனுக்கு அவனுடைய செயலால் மக்கள் மனதிலும் , அவன் மனதிலும் பெருமிதம் தோன்றுகிறது. தலைவனைப் பெற்ற தாய் தந்தையர் தலைவனைப் பெற்றதால் பெருமிதம் அடைகின்றனர். இந்தப் பெருமிதம் இயற்கை கொடுத்த கொடை அவர்களுக்கு இந்தப் பிறப்பில். (எம்பெருமான் கடல் வண்ணன் , மலையப்பன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். “மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்” என்பது திருவாய்மொழி வாக்கு. திருப்பாற்கடல், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை போன்ற திவ்ய தேசங்கள்)

3.ரத்தினம் என்பது தானாகவே கடலிலும் மலைகளிலும் தோன்றுகிறது. கடல் , மலைகள் அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. அதேபோல் தலைவன் என்பவன் ஒரு தாய் தந்தையருக்கு தானாகவே , அவனுடைய கர்ம பலன் காரணமாக இந்தப் பிறப்பில் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்து, அவர்கள் மூலம் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறான். ரத்தினம் போல் தானாகவே தோன்றிய தலைவர்கள் பலர் உண்டு , அது அவர்களின் இயற்கைக் குணத்தில் ஒன்றாகக் கலந்து இருப்பது என்பது இப்பிறவியில் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் பாக்கியம்.

4.ரத்தினத்தின் மேன்மை என்பது சுற்றுச்சூழலைப் பொறுத்து அதன் தரத்தின் தன்மை மெருகேற்ற அடையப்பெறுகிறது. அதேபோல் தலைவன் என்பவன் சுற்றுச்சூழல் தன்மையினால் அவனுடைய திறமையின் தரம் மெருகேற்ற அடையப் பெறுகிறது. ( எம்பெருமான் அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசங்கள் சுற்றுச்சூழலைப் பொறுத்து மேன்மை, மெருகேற்ற ஏற்படுகிறது). இப்படியாக உருவாக்கப்பட்ட தலைவர்களை ஒவ்வொரு தேசத்திலும், நிறுவனங்களிலும் பார்க்கிறோம்.

5.ரத்தினங்கள் என்பது பலமுறை சுத்தம் செய்து பட்டறைகளில் தீட்டினால் அதன் ஒளிர்வுத் தன்மை என்பது நன்றாக வெளிப்படும். ரத்தினம் ஒளிர்வால் மேன்மைபெறும். அதேபோல் தலைவன் என்பவன் தொடர் பயிற்சியினால் திறமைகளை மெருகேற்றிக் கொண்டு தன் பணிகளைத் திறம்படச் செயல்படுத்தமுடியும்.அதன்மூலம் மேன்மை பெறுவான். (எம்பெருமானுக்கும் , திவ்ய தேசங்களும் பக்தர்களின் சம்பந்தம் மூலமே அவனுடைய ஒளிர்வு என்பது ஏற்படுகிறது)

6.ரத்தினமானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும். அதே போல் நல்ல தலைவனை அடைந்த தேசம், தேசத்து மக்களை மார்பு நெறிக்கப் பண்ணும். ரத்தினமானது தன்னையுடையவனைப் பலரும் புகழும் படியும், சமுதாய செல்வாக்கு மிகுந்த நபராகப் பண்ணும். தலைவன் என்பவன் அவனுடைய செயல்களினால் பலராலும் பாராட்டக்கூடியவனாகவும் , சமுதாய செல்வாக்கு மிகுந்தவனாகவும் விளங்குவன்.

7.ரத்தினமானது சேற்றில் புதைந்து கிடந்தால் அதன் ஒளிர்வுத் தன்மை உலகத்திற்குத் தெரிய வராது. சேற்றை நீக்கினால் ரத்தின ஒளிர்வு புலப்படும். தலைவன் என்பவன் தன்னுடைய மாசுக்குணத்தை அகற்றி, தான் வெளிப்படும்போது அவனுடைய திறமை முழுவதுமாக வெளிப்படும் .

8.ரத்தினம் என்பது அதன் ஒளிர்வினால் அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட பொருள். அதேபோல் தலைவனின் செயல்கள், குணங்கள் அவன்பால் ஈர்க்கும் படி அமைய வேண்டும்.

  1. ரத்தினமானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி அழச்செய்யும். புலம்பலை ஏற்படுத்தும். நல்ல தலைவனை இழக்கும் போது சமுதாயம் கதறிப் புலம்புவதைப் பார்க்கமுடிகிறது. இதுவே சிறந்த தலைவன் என்பதை வெளிப்படுத்தும் ( மக்கள் மனதில் நிற்கும் தலைவன்)

“மாலே மணிவண்ணா” என்று ஆண்டாளும் , “மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா” என்று அவளுடைய திருத்தகப்பனார் பெரியாழ்வார் வாக்குகளின் படி எம்பெருமான் எல்லோருக்கும் பெரும் தலைவனாக நின்று, இயற்கையின் மூலம் சிறந்த குணங்களை ” தலைவன்” கற்றுக்கொள்ளும் படி உணர்த்திய வண்ணம் இருப்பது என்பது சனாதன தர்மத்தின் சிறப்பு. பாரத தேசத்தின் சிறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories