சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

Published:

pathinen chithar peetam chithra pournami - 2026

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சாணாம்பட்டியில் , இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் ஓடைகரையில் பதினெண்சித்தர் பீடஆலயத்தில் சித்ரா பௌர்ணமியையொட்டி சித்ரா பௌர்ணமி பெருவிழா யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு பதினெட்டாம்படி கருப்பனசாமி பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனை கள் செய்யப்பட்டது. மதியம் அன்ன தானமும், இலவச அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற் கை மருத்துவசிகிச்சை முகாமும் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, தயாளன் சுவாமி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடக்கி வைத்தார். அறங்காவலர் மாமல்லன் கார்த்திக் முன்னாள் கூட்டுறவு சங்கத்
தலைவர் இரும்பாடி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

இந்த மருத்துவ முகாமில், மருத்து வர்கள் லிங்குசெல்வி தலைமையில் மருத்துவக்
குழுவினர் மூட்டு வலி, முதுகுவலி, தலைவலி, கால் ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனை த்துவகை நோய்களுக்கும் மருத்து வசிகிச்சையளித்து மருந்து மாத்தி ரைகள் வழங்கினர். முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன் ராம் நன்றி கூறினார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img