கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவில்… 3 நாட்களும் அன்னதானம்!

karur bharathiya aiyappa dharma prachar sabha - 2026

கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் – அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழுவில் முடிவு

ஆன்மீக பணிகளில் தனி முத்திரை பதிக்க, அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா முழு வீச்சு ஏற்பாடு கரூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் – கரூர் மாவட்டத்தில் முப்பெரும் விழாவாக மாவட்ட கருத்தரங்கம், பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தேர்தல் என்று நடைபெற்றது

கரூரில் உள்ள தனியார் மஹாலில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. தேசிய துணை தலைவர் விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் அணிஸ்குமார், தமிழ் மாநிலத்தலைவர் எல்.ஆர்.ராஜூ, மண்டல செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆண்டு அறிக்கையை வாசித்தார். வரவுசெலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் பி.ஆர்.வாசுதேவன் வாசித்தார். கூட்டத்தில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கூட்டம் இனி மாதந்தோறும் நடத்துவது என்றும், வருகின்ற கரூர் மாரியம்மன் திருவிழாவினை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் மூன்று தினங்கள் நடத்துவது என்றும், வருகின்ற மண்டல மகர காலங்களில் அன்னதானத்தினை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதில், பிரச்சார சபாவின் போசகர் பி.என்.கே.மேனன் அவர்களுக்கும், ஆற்றல்மிகு தேசிய தலைவர் கே.ஐயப்பதாஸ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் இறுதியில் தெரிவித்தார்.

மேலும், ஆன்மீக பணிகளில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்பாடு செய்ய இந்த கூட்டம் முழு ஒத்துழைப்பு எடுப்பதாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அதனை தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories