“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’ (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்246400_479182102136836_1433845875_n

 
(முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக)
(இதன் பின் பகுதி அதி ஸ்வாரஸ்யம்) ஒரு பிரம்மசாரி பிக்ஷையில் ஏதோ ஒரு கீரையைப்
பக்குவம் செய்து வைத்திருந்தான்.நல்ல கீரையாக
இருந்ததால் சற்று அதிக அளவிலேயே வைத்திருந்தான்,
 
பெரியவாள் அவ்வளவையும் அமுது செய்திருக்கிறார்கள்
இதைப் பார்த்துச் சந்தோஷித்த பிரம்மசாரிக்கு ‘அபிமானம்’
வந்து விட்டது. மறுநாளும் அதை நிறையத் தயாரித்து
பிக்ஷையில் சேர்த்திருந்தான்.அன்றும் அதனைப் 
பெரியவாள் உட்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாளும்
கீரை தொடர்ந்தது. அன்று பெரியவாள் பிக்ஷை
முடித்தபின்,”மூன்று நாளாகக் கீரை” என்றார்கள்.
 
பெரியவாள் ஷொட்டுக் கொடுப்பதாக மகிழ்ந்தான்
பிரம்மசாரி.”பெரியவா ருசிச்சுச் சாப்பிடறதாகத்
தெரிஞ்சதாலேதான் இன்னிக்கும் பண்ணினேன்”
என்று சொல்லிவிட்டான்.
 
அதில் பிடித்த அனர்த்தம்தான் இந்தக் கடும் உபவாஸம்!
 
(கட்டுரையே கடும் உபவாஸத்தை தொடர்ந்து நடக்கும்
சம்பவம்-முன் பகுதி நான் டைப் பண்ணவில்லை)
 
அறியாத்தனத்தால் செய்த காரியத்துக்காக அழுத
பிரம்மசாரியிடம் ஸி.எஸ்.வி, “சரி, இங்கே அழறதை
ரெண்டு பேருமாப் போய் பெரியவாகிட்டேயே அழுது
உபவாஸத்தை முடிக்கச் சொல்லி முறையிடுவோம்” என்றார்.
 
ஆனால் பெரியவாள் இவர்களை அழவிடவில்லை.
பிரம்மசாரியிடம் அன்பு மயமாகச் சொன்னார்;
“உங்கிட்ட என்ன தப்பப்பா? உங்கிட்ட கோவிச்சுண்டு
நான் உபவாஸம் இல்லை. எனக்கு ஜிஹ்வா சாபல்யம்
(நாவுச் சபலம்) போகலை என்கிற மாதிரி நான் 
நடந்துண்டா, அதுக்கு என்னை நானே தண்டிச்சுக்கத்தானே
வேணும்?”
 
மானேஜரைப் பார்த்துச் சொன்னார்;
 
“இந்த மாதிரி நான் ஒரு ஷாக்-ட்ரீட்மென்ட் தராட்டா, இவன் நித்யமும் இந்தக் கீரைக்காக யாரிடமாவது சொல்லி
ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும். பக்தாளும் சந்தோஷமாப்
போட்டி போட்டுண்டு கொண்டு வந்து கொடுப்பா. ஆனா, வேறே தினுசான ஜனங்களும் இருக்கத்தானே
 செய்வா? அவா இதைக் கேள்விப்பட்டுட்டு,
“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’னு
சொல்லுவா.
 
என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை.
என்னைத் திட்டறவா ‘சங்கராச்சார்யார்’-ங்கிற பேரைச்
சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத்
திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories