December 8, 2025, 8:38 PM
25.6 C
Chennai

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

“பெரியவாளின் நுட்பமான வாதம்” தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம்.246400_479182102136836_1433845875_n
கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர்,
கும்பகோணத்தில் ஸ்ரீமடம் நிரந்தரமாக இயங்குவதற்கு
தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.
அதனால் ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுக்கு, தஞ்சை
மன்னரின் ராஜகுரு என்ற பதவியும் சிறப்பும் கிடைத்தன.
 
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச மன்னர்களின்
நிலை தலைகீழாக மாறி விட்டது.
 
‘சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு
வரும் உதவித் தொகை நிறுத்தப்படப் போகிறது’
என்ற தகவல், தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம்
ராஜா அவர்களை எட்டியது.ஆடிப் போய்விட்டார் அவர்.
 
பரமாசாரியாளிடம் வந்து, தன் நிலைமையை விண்ணப்பித்துக் கொண்டார்.
 
உடனே, அந்தக் காலத்தில் சட்டத்துறை மகா மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ்.வேங்கட-
ரமணியும்,டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரிகளும்
வரவழைக்கப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு
இந்திய அரசாங்கத்துக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டது.
 
“பெரியவாளிடம் காட்டிவிட்டு அனுப்பலாமே?
என்றார்கள் சட்ட வல்லுநர்கள்.
 
பெரியவாள், அப்போது, கிழக்குக் கோதாவரிப்
பகுதியில் யாத்திரையில் இருந்தார்கள்.
 
படித்துப் பார்த்தார்கள், பெரியவாள்.
 
“ரொம்ப சரி,பக்குவமா,சட்டரீதியா எழுதியிருக்கேள்..”
 
சிறு இடைவெளி.
 
“வெங்கட்ராமா- ஒரு சின்ன பாரா சேர்க்கலாமோ?..
லண்டன் ப்ரிவி கவுன்சில்லே பிலிப்ஸ்-ங்கிறவர்
கொடுத்த தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கு…?
 
…..இப்போது,சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசு
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும்,
பின்னர் ஒரு காலத்தில், அந்தந்த சமஸ்தானங்களை,
அந்தந்த மன்னர் பரம்பரையினருக்கே வழங்கி விடலாம்
என்று தீர்மானம் செய்யுமேயானால், தஞ்சாவூர் மன்னர்
பரம்பரையினருக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.
 
“….சமஸ்தானத்தையே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்லியிருக்கும்போது
இப்போதைய தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கு,
போதுமான இடமும் வசதிகளும் செய்து கொடுப்பது
நியாயமல்லவா? குறைந்த பட்சம், தற்போதுள்ள
வசதிகள் ரத்தாகாமல் பார்த்துக் கொள்வது,
அரசாங்கத்தின் கடமை…”
 
சட்டங்களின் கரைகண்டவர் என்று போற்றப்பட்ட
வெங்கட்டராம சாஸ்திரி, அப்படியே பிரமித்துப்
போய்விட்டார். பெரியவாளின் நுட்பமான வாதம்
அவரை கட்டிப்போட்டுவிட்டது.
 
“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து
விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு
அப்பீல் செய்ய!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories