December 5, 2025, 6:09 AM
24.9 C
Chennai

சபரிமலை ஆடி நிறை புத்தரிசி பூஜை; மாலை நடை திறப்பு!

sabarimala niraiputharisi pooja - 2025

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆடி நிறை புத்தரிசி பூஜை விழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

நாளை புதன்கிழமை காலை நெற்கதிர்கள் கொண்டு பூஜை செய்து சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் நிறைபு த்தரிசி பூஜை விழா விமர்சையாக நடைபெறும்.

கேரளாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஐதீக ஜடங்குகளில் ஒன்று நிறைபுத்தரிசி பூஜை வழிபாடாகும். ஆவணி மாதத்தில் இங்கு விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன்பு விளைந்த கதிர்களை பகவானுக்கு படைத்து பூஜை செய்வது நிறைபுத்தரிசி பூஜை சடங்கு.

இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும். இதற்கான நாள், திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் அரண்மனையில் நாள் குறிக்கப்பட்டு அதே நாளில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பகவானுக்கு நெற்கதிர் படைத்து நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடப்படும்.

இந்த விழா சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சபரிமலையில் நெற்பயிர் பயிரிடப்பட்டாலும் பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து நெற்கதிர்களை கொண்டு வந்து வழங்குகின்றனர்.

இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜை புதன்கிழமை ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, இன்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தை தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். ஐயனின் தவ அலங்காரம் களைந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

இன்று சபரிமலை வந்த ஏராளமான பக்தர்கள் நெற்கதிர்களை அதிக அளவில் கொண்டு வந்தனர். நாளை காலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் 4:00 மணிக்கு நடை திறந்ததும் கணபதி ஹோமம் மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தி தொடர்ந்து காலை 5.30 முதல் 6.30குள் நெற்கதிர்களை சோபன மண்டபத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜிவரு பூஜை செய்து நிறைபுத்தரிசி பூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பிற மாநில பக்தர்களும் சபரிமலைக்கு வந்துள்ளனர். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வழக்கமான பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும். இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை முடித்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories