February 22, 2026, 8:50 AM
26.1 C
Chennai

பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் உற்சாகம்

kallalagar-vaigai-river-chithra-pournamiமதுரை: மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை நகரின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம் என 12 நாட்கள் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக அழகர்மலையில் இருந்து பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு மே2 ஆம் தேதி மதுரை நோக்கிப் புறப்பட்டார். மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடி பகுதியில் பெருந்திரளான மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு அளித்தனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நேற்று நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 6.47 மணி அளவில் பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால், இந்த வருடம் நல்ல சுபிட்சமும் வளமும் இருக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டனர். பின்னர் கோவிந்தா…கோவிந்தா…என வான் அதிர கோஷமிட்டு பக்தர்கள் கள்ளழகரை வழிபட்டனர். கள்ளழகரை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வைகையாற்றில் இன்று அதிகாலை முதலே குவிந்திருந்தனர். பின்னர் ராமராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். அங்கே தீர்த்தவாரி முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories