தஞ்சை பெரியகோவில் தேர் வெள்ளோட்டம்!

Published:

car-tanjore தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் தேர் வெள்ளோட்டம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து இழுக்க நடைபெற்றது. சுமார் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர் வெள்ளோட்டத்தின்போது, நமச்சிவாய என கோஷம் இட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பிரம்மோற்ஸவ விழா 18 நாட்கள் கொண்டாடப்படும். சித்திரை பிரமோற்ஸவ விழாவின் 15ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், தேர் பழுதானதால், தஞ்சாவூரில் தேரோட்டம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாம். இந்நிலையில் இன்றுதேர் புதிதாக செய்யப்பட்டு வெள்ளோட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Related articles

Recent articles

spot_img