20 கோடி மதிப்புள்ள ஹரிவரதராஜ பெருமாள் கோவில் நிலம் அபகரிப்பு! பக்தர்கள் முறியடிப்பு!

Land-grabbing
Land-grabbing

பல்லடம் அருகே, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்துக்கு, பட்டா பெற நடந்த முயற்சியை, பக்தர்கள் முறியடித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, காளிவேலம்பட்டியில், 400 ஆண்டு பழமையான ஹரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.தற்போது, சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக, காளிவேலம்பட்டியில் 3.5 ஏக்கர், சுக்கம்பாளையத்தில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது.

பக்தர்கள் கூறியதாவது:முதன்மை ஆவணத்தில், ‘கோவில் நிலம்’ என்பதற்கான சான்று உள்ளது. இனாமாக வழங்கப்பட்ட கோவில் நிலத்தை சிலர் முறைகேடாக பெற்று, சிட்டாவில் பெயரை இணைத்து, பட்டா பெற முயற்சிக்கின்றனர். நிலத்துக்கு வேலி அமைத்ததுடன், மின் இணைப்பும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அனைத்து அரசு துறைகளுக்கும் புகார் அளித்தோம். இதையடுத்து, பட்டா மாறுதல் செய்யக்கூடாது என வருவாய் துறைக்கு, இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவில் நிலம், 20 கோடி ரூபாய் மதிப்புடையது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கோவில் நிலத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.

அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோவில் பெயரில் உள்ள இனாம் நிலங்கள் குறித்த விபரங்களை வருவாய் துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடித்து வருவதால் முழு விபரங்களை சேகரிக்க முடியாமலும், நிலங்களை மீட்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories