கேரளாவில் வாமனருக்கு திருக்காட்கரையில் ஒரு ஆலயம்…

IMG 20220906 WA0062 - 2026

பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கேரளாவில் நாளை முதல் துவங்குகிறது. நாளை தலைஓணம் பண்டிகையும் நாளை மறுநாள் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 9 ல் மூன்றாம் ஓணமும் செப்டம்பர் 10 கடைசி ஓணம் விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகைக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க புராண கதையும் உண்டு.

பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. திரேதா யுகத்தில் இன்றைய கேரளத்தை ஆட்சி புரிந்தவர். திருமாலின் 5வது அவதாரமான வாமன மூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, ஆண்டுதோறும் தன் மக்களைக் காண வருவதாக ஐதீகம். அந்த நாள் ஆவணி மாதம் திருவோணம். வாமனர் அவதரித்ததும் இதே நாளில்தான். வாமன மூர்த்தி குடிகொண்டுள்ள திருத்தலம் திருக்காட்கரை. வாமனரின் திருவடிகள் முதன்முதலில் இந்த பூமியில் பதிந்த இடம் இது என்பதால் திரு+கால்+கரை = திருக்காட்கரை எனப்பெயர் பெற்றது.

கேரளாவில் கொச்சி அருகே உள்ள இத்தலத்தில் மூலவருக்கு திருக்காட்கரை அப்பன் என்பது திருநாமம் சூட்டப்பட்டது. ஓணம் பண்டிகைக்கான அறிவிப்பு இக்கோவிலில் இருந்துதான் ஆண்டுதோறும் வெளியாகும். அதன்பிறகு நாடு முழுவதும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் முக்கியமான 10 நாள் திருவிழாவும் இதுவே ஆகும். வரும் 8ம் தேதி திருவோணம் பண்டிகை. திருக்காட்கரை அப்பன் தரிசனம் முக்கியமானதாக மலையாளிகள் கருதுகின்றனர்.இக் கோயில் தினசரி பூஜை வழிபாடுகள் காலை மாலை இரவு நடந்தாலும் ஆவணி ஹஸ்தம் முதல் திருவோணம் வரை சிறப்பு பூஜைகள் நடத்தி பத்துநாள் திருவிழா நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories