திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம்

thiruppavai 10 - 2026

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்றஅனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
ஒன்பதாம் பாசுரத்தில் தன் தோழியின் தாயாரிடம், உன் மகளை எழுப்பிவிடு என்று கோரிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, ராமபிரானால் தோல்வியுற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உன்னிடம் கொடுத்துச் சென்றானோ என்று மயக்கம் கொண்டு தன் தோழியிடம் வினவுகிறார் பத்தாம் பாசுரத்தில்!

நோன்பினை நோற்று, சுவர்க்கம் போன்ற சுக அனுபவம் பெறுபவராய்த் திகழும் அம்மே! இவ்வளவு கூறியும் வாசல் கதவைத்தான் திறக்காதவராய் இருக்கின்றீர்கள், ஆனால், பதிலுக்கு ஒரு வார்த்தையும் சொல்லாமல் இருக்கலாகுமோ? நறுமணம் வீசும் துளசி எனும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமுடியைக் கொண்டவன் அந்த நாராயணன். நம்மால் மங்களாசாசனங்கள் பண்ணப் பெற்று, அதனாலே மகிழ்ந்து நமக்கு அனைத்து விதமான நலன்களையும் தந்தருள்பவன்.

அவன் தர்மமே வடிவு கொண்டாற்போன்று, ராமபிரானாய் இங்கே எழுந்தருளினான். முன் ஒரு காலத்தில் யமன் வாயில் விழுந்த இரையாக அந்த ராமபிரானால் நற்கதி அடைந்த கும்பகர்ணன், தான் தோற்று அதுவரை தான் கொண்டிருந்த பேருறக்கத்தை உனக்கேதான் கொடுத்துவிட்டானோ? மிகுந்த உறக்கம் உடையவளே! பெறுவதற்கு அரிய ஆபரணம் போன்றவளே! உறக்கம் கலைந்து, உள்ளம் தெளிந்து உடனே வந்து கதவைத் திறந்திடுவாய்! – என்று தோழியை விரைந்து எழுந்து கதவைத் திறந்து வெளிவருமாறு கூறுகிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories