December 5, 2025, 1:09 PM
26.9 C
Chennai

திருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)

thiruppavai pasuram 25 - 2025

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

thiruppavai pasuram 25 - 2025

விளக்கம்
———
முந்தைய பாசுரத்தில் தன்னை மங்களாசாசனம் செய்த பெண்களிடம், “பெண்களே! நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில் நீங்கள் உங்கள் உடலைப் பேணாமல், வருத்துவது ஏன்? நீங்கள் விரும்புவது வெறும் பறைதானோ அல்லது வேறு ஏதும் உண்டோ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், “பெருமானே! உன் குண விசேஷங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்ததால், வருத்தம் இன்றி சுகமாகவே வந்தோம். பறை வேண்டுதலை சாக்காக வைத்து உன்னைக் காண்பதையே பேறாக நினைத்து வந்தோம்” என்கின்றனர் இந்தப் பாசுரத்தில்!

“தேவகி பிராட்டியாகிற ஒருத்திக்கு மகனாக அவதரித்தாய். பின்னர், அவதார காலமாகிய அந்த ஓர் இரவுப் பொழுதில், திருவாய்ப்பாடியில் நந்தகோபரின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாய். அங்கே, யசோதை பிராட்டியாகிய ஒருத்தியின் மகனாக வளர்ந்தாய். அதுவும் கம்சன் கண் படாதவாறு ஒளித்து வளர்க்கப்பட்டாய்.

இப்படி ஏகாந்தமாக வளரும் காலத்தில், அங்ஙனம் நீ வளர்வதைப் பொறுக்க மாட்டாத கம்சன், உன்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று தீங்கு நினைத்தான். கம்சனின் எண்ணத்தை வீணாக்கி, அவன் வயிற்றில் நெருப்பு எனும்படியாக நின்ற நெடுமாலே! உன்னிடத்தில், புருஷார்த்தத்தை யாசித்துக் கொண்டு இங்கே வந்து நின்றோம்.

எங்களுடைய மன விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நீ நிறைவேற்றித் தருவாயாகில், பிராட்டி விரும்பத்தக்க செல்வத்தையும் வீர்யத்தையும் புகழையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி, மகிழ்ந்திடுவோம்” என்கிறார் ஸ்ரீஆண்டாள்.

சகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருந்தமரம் என பல்வேறு பொருள்கள் மூலம், அசுரர்களை அனுப்பியும், பூதனையை அனுப்பியும், விழா நடப்பதென வரவழைத்து குவலயாபீட யானையை ஏவியும், இப்படியாகக் கண்ணபிரானின் நலிவைக் காண கம்சன் செய்த தீங்குகளுக்கு வரையறை இல்லாமல் இருந்ததைப் புலப்படுத்துகிறார் ஸ்ரீஆண்டாள்.

மேலும், எப்படியாவது கண்ணன் கதையை முடித்து, மருமகன் போனானே என்று கண்ணீர் விட்டு அழுது துக்கம் பாவிக்கலாமே என்ற கம்சனின் எண்ணத்தை அவனுடனேயே முடியும்படி செய்துவிட்டானே என்றும் போற்றுகிறார்.

– விளக்கம் : செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories