Ind Vs Eng: இது… இங்கிலாந்து அணியின் நாள்!

eng vs ind test
eng vs ind test

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் ஆட்டம் – இது இங்கிலாந்து அணியின் நாள்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் (26.08.2021) ஆட்டத்தை இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 120 ரன் என்ற கணக்கோடு தொடங்கியது. ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் விளையாடி, எட்டு விக்கட் இழப்பிற்கு 403 ரன்கள் சேர்த்துள்ளது.

அதாவது இன்று ஒருநாளில் 303 ரன்கள். ஒரு நாளில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது மிகச்சிறந்த ஆட்டம். எனவே இங்கிலாந்து மிகச்சிறந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.

இப்போதே இங்கிலாந்து அணியினர் இந்திய அணியை விட 345 ரன்கள் அதிகம் எடுத்து இருக்கிறார்கள். நாளை ஆட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை விளையாடி இன்னும் ஒரு 55 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணிக்கு ஒரு மனோபலம் கிடைக்கும்.

இந்திய அணியை 400 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை அளிக்க முயற்சி செய்வார்கள். இந்திய பேட்ஸ்மென்கள் நாளை, மூன்றாம் நாளும், நான்காம் நாளும் ஆடி, ஐந்தாம் நாளிலும் பாதி நாள் ஆடினால் இந்தியாவிற்கு வெற்றி அல்லது கௌரவமான ட்ரா அல்லது தோல்வி கிடைக்கலாம்.

ரோஹித் ஷர்மா, கே. ஏல். ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, பந்த் ஆகியோரில் இருவர் செஞ்சுரி போடவேண்டும்; பாக்கியுள்ளோர் 50ஐத் தாண்டவேண்டும். செய்வார்களா?

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டின் ஆறாவது சதம் இது. இந்த ஆண்டில் 228, 186, 218, 109, 180, இந்த இன்னிங்க்ஸில் 121 என ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் ஆறு சதங்கள் என்பது இங்கிலாந்து வீரர்களின் முந்தைய சாதனைய அவர் சமன் செய்திருக்கிறார்.

இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. அவர் மேலும் சதங்கள் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட் விளையாட்டில் உண்மையிலேயே சிறந்த அணியா? இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories