Ind Vs Eng: இது… இங்கிலாந்து அணியின் நாள்!

eng vs ind test
eng vs ind test

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் ஆட்டம் – இது இங்கிலாந்து அணியின் நாள்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் (26.08.2021) ஆட்டத்தை இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 120 ரன் என்ற கணக்கோடு தொடங்கியது. ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் விளையாடி, எட்டு விக்கட் இழப்பிற்கு 403 ரன்கள் சேர்த்துள்ளது.

அதாவது இன்று ஒருநாளில் 303 ரன்கள். ஒரு நாளில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது மிகச்சிறந்த ஆட்டம். எனவே இங்கிலாந்து மிகச்சிறந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.

இப்போதே இங்கிலாந்து அணியினர் இந்திய அணியை விட 345 ரன்கள் அதிகம் எடுத்து இருக்கிறார்கள். நாளை ஆட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை விளையாடி இன்னும் ஒரு 55 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணிக்கு ஒரு மனோபலம் கிடைக்கும்.

இந்திய அணியை 400 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை அளிக்க முயற்சி செய்வார்கள். இந்திய பேட்ஸ்மென்கள் நாளை, மூன்றாம் நாளும், நான்காம் நாளும் ஆடி, ஐந்தாம் நாளிலும் பாதி நாள் ஆடினால் இந்தியாவிற்கு வெற்றி அல்லது கௌரவமான ட்ரா அல்லது தோல்வி கிடைக்கலாம்.

ரோஹித் ஷர்மா, கே. ஏல். ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, பந்த் ஆகியோரில் இருவர் செஞ்சுரி போடவேண்டும்; பாக்கியுள்ளோர் 50ஐத் தாண்டவேண்டும். செய்வார்களா?

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டின் ஆறாவது சதம் இது. இந்த ஆண்டில் 228, 186, 218, 109, 180, இந்த இன்னிங்க்ஸில் 121 என ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் ஆறு சதங்கள் என்பது இங்கிலாந்து வீரர்களின் முந்தைய சாதனைய அவர் சமன் செய்திருக்கிறார்.

இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. அவர் மேலும் சதங்கள் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட் விளையாட்டில் உண்மையிலேயே சிறந்த அணியா? இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories