Ind Vs Eng: 4ஆம் டெஸ்டில் இந்தியா..! இது கோலிக்கான ‘டெஸ்ட்’!

eng vs ind test
eng vs ind test

இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட், முதல் நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 53 (மாலன் 26*, பும்ரா 2-15); இந்தியா 191 (தாகூர் 57, கோலி 50, வோக்ஸ் 4-55, ராபின்சன் 3-38) இங்கிலாந்து அணி 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.

முதல் நாளில் இந்தியா சொற்ப ரன்களுக்கு அவுட்டானாலும் பிற்பகல் சூரிய ஒளியில் மூன்று இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. மேகமூட்டமான சூழ்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது

ஆனால் ஆட்டத்தின் இறுதியில் அவர்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் மங்கலான சூரிய ஒளியில் ஆடவேண்டியதாக இருந்தது. அதனால் மூன்று விக்கெட்டுகள் – இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் ஜஸ்பிரித் பும்ராவிடமும் ஜோ ரூட் உமேஷ் யாதவ்விடம் வீழ்ந்தனர்.

ஒன்பது ஓவர்கள் பேட்டிங் செய்து பதினோரு ரன்கள் எடுத்த பிறகு முதலில் வெளியேறினார் ரோஹித் சர்மா. இது அவரது வழக்கமான விளையாட்டு அல்ல, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறிய விதம் சரியாக இல்லை. ராபின்சன், கேஎல் ராகுலை எல்பிடபிள்யூவில் சிக்க வைத்தார். இந்த முடிவு டிஆர்எஸ் மூலம் உறுதி செய்யப்பட்டது.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

சேதேஷ்வர் புஜாரா குறைந்த ரன்களுக்கு மலிவாக வெளியேறும்போது அவர் அனைவராலும் விமர்சிக்கப்படுகிறார். அவர் 31 பந்துகளை எதிர்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் விளையாடினார், ஆனால் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஸ்விங்கருக்கு வெளியேறினார்.

டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன், ஒரு மணி நேரம் மைதானத்தில் நின்று ஆடிய பிறகு, இந்த வழியில் வெளியேறுவது தவறு; ஒத்துக்கொள்ள முடியாதது. கோஹ்லி நன்றாக விளையாடினார். ஆனால் மதிய உணவு இடைவெளியில் ரவிந்திர ஜடேஜாவை 5 வது இடத்தில் ஆடச்சொன்னது சர்ச்சைக்குரிய முக்கியப் புள்ளியாக இருந்தது. இருந்தாலும் இந்தியாவின் நடுத்தர வரிசையில் வலது கை மட்டையாளர்களாகவே இருந்ததால் ஜடேஜாவை இறக்கியிருப்பார் போலும்.

கோலி 22 ரன் எடுத்தபோது ரூட் அவரது கேட்ச் ஒன்றினை பிடிக்கத்தவறினார். அவர் முதலில் வோக்ஸ் வீசிய பந்தில், ஆஃப் ஸ்லிப்பில் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். இருப்பினும், ரூரி பர்ன்ஸ், இரண்டாவது ஸ்லிப்பில் பிடிக வேண்டிய கேட்சை ரூட் பிடிக்க முயற்சி செய்து தவறவிட்டார். வோக்ஸின் அடுத்த ஓவரில் ரூட் தனது தவறுக்குப் பரிகாரம் செய்தார்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஜடேஜாவின் வெளிப்புற விளிம்பில் பட்டு வந்த பந்தை பிடித்து ஒரு கடினமான கேட்சைப் பிடித்தார். ஆனால் கோஹ்லியின் சரளமான ஆட்டம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது. லீட்ஸில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து, கோஹ்லி தனது நிற்கும் நிலைப்பாட்டை சற்று சரிசெய்து, தனது ஆஃப் ஸ்டம்பை நோக்கி நகர்ந்து நின்று விளையாடினார்.

அவர் 85 பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதத்தை எட்டினார். கோஹ்லி தனது அரைசதத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து மீண்டும் அவுட் ஆனார். அஜிங்கியா ரஹானே மற்றும் ரிஷப் பந்த் இருவருக்கும் இது மோசமான சுற்றுப்பயணமாகும். எனவே அழுத்தத்தில் இருந்தனர். பன்ட் வெறித்தனமாக ஆட, ரஹானே மெதுவாக ஆடினார். ஆனால் இருவரும் வெகு நேரம் நிலைக்கவில்லை

இதன் பின்னர் தாகூர் ஆடிய ஆட்டம் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. முகமது ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணிக்குள் வந்தார். இன்று இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்படவில்லை. அஸ்வின் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்படவில்லை. தாகூர் அடித்து விளையாடுவது என முடிவு செய்து ஆடினார். மூன்று சிக்ஸ், ஏழு ஃபோர்களுடன் அவர் 57 ரன் அடித்தார். அவர் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தியா நான்கு பந்துகளில் கடைசி மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

ஐந்து பந்துகள் இடைவெளியில் இரண்டு இங்கிலாந்து தொடக்க வீரர்களையும் நீக்கி பும்ரா விளையாட்டை மீண்டும் சுவையானதாக ஆக்கினார்.

இன்று இரண்டாவது நாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories