தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு!?

india sa test - 2026

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – மூன்றாவது நாள்
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-

ஆட்டநேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸ் 202 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 266 ரன் (புஜாரா 53, ரஹானே 58, விஹாரி 40, தாகூர் 28) தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் 229 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 118/2 (எல்கர் 46*, மர்க்ரம் 31).

தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னமும் 122 ரன்கள் தேவை. இரண்டு நாட்கள் ஆட்டம் மீதியுள்ளது. இன்றைய ஆட்டத்தைத் தொடங்கிய புஜாராவும் ரஹானேயும் விறுவிறுப்பாக ஆடினார்கள்.

இன்றோடு மூன்று நாள் ஆட்டம் பாக்கியிருக்கும் நிலையில் டெஸ்ட் மேட்ச் வல்லுநர்களான இவர்கள் இருவரும் விக்கட்டைத் தக்கவைத்துக்கொண்டு அதிக நேரம் ஆடியிருக்கவேண்டும். முதல் செசஷன் ஆட்டத்திற்குப் பிறகு முதலில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் புஜாரா அவுட்டானார்.

பந்த் ரபாடாவின் பந்து ஒன்றை தூக்கி அடிப்பதற்காக இறங்கி ஆடினார். ஆனால் அந்த பந்து விக்கட்கீப்பரிடம் கேட்சாய் முடிந்தது. விஹாரி ஒருபக்கம் கட்டை போட்டுக்கொண்டிருக்க மறுபுறம் விக்கட்டுகள் விழுந்துகொண்டிருந்தன.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஒருகட்டத்தில் இன்னிங்ஸ் முடிந்துவிடுமோ என நினைத்து விஹாரி சில டமால்-டுமீல் ஷாட்டுகள் ஆடினார். அதனால் ஸ்கோர் 266 வரை வந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்த தெனாப்பிரிக்க வீரர்கள் பயமின்றி தங்கள் ஷாட்டுகளை ஆடினர்.

ரன்ரேட் 4.5க்கு மேல் போய்க்கொண்டு இருந்தது. பின்னர் அஸ்வின், ஷர்துல் தாகூர் இருவரும் பந்து வீச வந்தபின்னர் ரன்ரேட் குறைந்தது. நாளை என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

122 ரன்னுக்குள் இந்திய அணியின் பவுலர்கள், குறிப்பாக ஷமி, பும்ரா, தாகூர் ஆகிய மூவரும் தென் ஆப்ப்ரிக்க அணியை ஆல் அவுட் ஆக்கவேண்டும். இல்லையென்றால் வெற்றி தென் ஆப்பிரிக்க அணிக்குத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories