மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரை வென்ற இந்திய அணி!

ind vs wi - 2026

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா தொடரை வென்றது

இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் அது மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் தொடரையும் வென்றது. பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் பந்து வீசி, 3 மெய்டன், 12 ரன், 4 விக்கட் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தார்.

9 ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே ஒரு பந்து வீச்சாளர் கொடுத்தால் 50 ஓவர் மேட்சில் எதிரணி என்ன செய்ய முடியும். டாஸ் வென்று மேற்கிந்திய அணி இந்தியாவை விளையாடச் சொன்னது. இன்று கே.எல். ராகுல் விளையாடியதால் இஷான் கிஷன் விளையாடவில்லை.

ஆனால் ரோஹித்துடன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் ரோஹித், ரிஷப், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. இதனால் முதல் 10 ஓவரில் மொத்தம் 37 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு ஆடவந்த ராகுலும் (48 பந்துகள், 49 ரன்) சூர்யகுமார் யாதவும் (83 பந்துகள் 64 ரன்) சிறப்பாக ஆடினர். இருந்தாலும் ரன் ரேட் ஏறவில்லை.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 237 ரன் எடுத்தது. எளிதான இலக்கை அடைய மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமது இன்னிங்ஸை நன்றாகத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்து வீசினர்; தொடர்ந்து விக்கட் எடுத்தனர்; குறிப்பாக பிரசித் கிருஷ்ணா இன்று மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசினார். எனவே 46 ஓவரில் அனைத்து விக்கட்டையும் இழந்து 193 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

எனவே 44 ரன் களில் இந்தியா வெற்றிபெற்று போட்டியையும் தொடரையும் வென்றது.

சென்ற போட்டியின்போது பொலார்ட் வருத்தப்பட்டது போல இந்தப் போட்டியிலும் மேற்கிந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடவில்லை.

கோலியின் ஆட்டம் கவலையளிக்கிறது. இன்று ஒரு மிகச் சாதாரணமான ஷாட் ஆடி அவர் அவுட்டானார். இன்றைய ஆட்டம் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Entertainment News

Popular Categories