மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரை வென்ற இந்திய அணி!

ind vs wi - 2026

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியா தொடரை வென்றது

இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் அது மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் தொடரையும் வென்றது. பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் பந்து வீசி, 3 மெய்டன், 12 ரன், 4 விக்கட் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தார்.

9 ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே ஒரு பந்து வீச்சாளர் கொடுத்தால் 50 ஓவர் மேட்சில் எதிரணி என்ன செய்ய முடியும். டாஸ் வென்று மேற்கிந்திய அணி இந்தியாவை விளையாடச் சொன்னது. இன்று கே.எல். ராகுல் விளையாடியதால் இஷான் கிஷன் விளையாடவில்லை.

ஆனால் ரோஹித்துடன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் ரோஹித், ரிஷப், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. இதனால் முதல் 10 ஓவரில் மொத்தம் 37 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு ஆடவந்த ராகுலும் (48 பந்துகள், 49 ரன்) சூர்யகுமார் யாதவும் (83 பந்துகள் 64 ரன்) சிறப்பாக ஆடினர். இருந்தாலும் ரன் ரேட் ஏறவில்லை.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 237 ரன் எடுத்தது. எளிதான இலக்கை அடைய மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமது இன்னிங்ஸை நன்றாகத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்து வீசினர்; தொடர்ந்து விக்கட் எடுத்தனர்; குறிப்பாக பிரசித் கிருஷ்ணா இன்று மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசினார். எனவே 46 ஓவரில் அனைத்து விக்கட்டையும் இழந்து 193 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

எனவே 44 ரன் களில் இந்தியா வெற்றிபெற்று போட்டியையும் தொடரையும் வென்றது.

சென்ற போட்டியின்போது பொலார்ட் வருத்தப்பட்டது போல இந்தப் போட்டியிலும் மேற்கிந்திய அணி 50 ஓவர்களை முழுமையாக ஆடவில்லை.

கோலியின் ஆட்டம் கவலையளிக்கிறது. இன்று ஒரு மிகச் சாதாரணமான ஷாட் ஆடி அவர் அவுட்டானார். இன்றைய ஆட்டம் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories