Ind Vs WI: டி20 இரண்டாவது போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!

ind vs wi 1 - 2026

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி – இந்தியா திரில் வெற்றி
– K.V. பாலசுப்பிரமணியன்

என்ன ஒரு விருவிருப்பான ஆட்டம். அதுவும் புவனேஷ்குமார் வீசிய அந்த 19ஆவது ஓவர் மிகவும் பிரமாதம். 18ஆவது ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 12 பந்துகளில் 29 ரன் எடுக்க வேண்டியிருந்தது. நிக்கோலஸ் பூரன் 62 ரன்னோடும், பொவல் 51 ரன்னோடும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

19ஆவது ஓவரில் புவனேஷ்குமார் 4 ரன்கள் கொடுத்து நிக்கோலஸ் பூரனின் விக்கட்டை எடுக்கிறார். எனவே 20ஆவது ஓவர் வீச வரும் ஹர்ஷல் படேலுக்கு 6 பந்துகளில் 25 ரன் கொடுக்காமல் வீச வேண்டும் என்பது இலக்காகிறது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஒற்றை ரன் கொடுக்கிறார். எனவே அடுத்த நான்கு பந்துகளில் 23 ரன் எடுக்க வேண்டும்; அதாவது தொடர்ந்து நாலு சிக்சர் அடிக்க வேண்டும்.

மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகள் சிக்சருக்குப் பறக்கின்றன. இந்திய அணி வீரர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கும் இதயம் வெளியே வந்து விழுந்திருக்கும்; அத்தனை வேகமாகத் துடித்திருக்கும். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளிலும் இரண்டு ஒற்றை ரன்கள் கொடுத்து ஹர்ஷல் படேல் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தார். முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. விராட் கோலி இன்று நன்றாக விளையாடினார். அவர் 52 ரன் எடுத்தார்.

ரிஷப் பந்த் (28 பந்துகளில் 52 ரன்) வெங்கடேஷ் ஐயர் (18 பந்துகளில் 33 ரன்) இருவரும் அதிரடியாக ஆடினர். அதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 186 ர்ன் எடுத்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் மெதுவாக ஆடினர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஆனால் நிக்கோலஸ் பூரன் (41 பந்துகளில் 61 ரன், 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) மற்றும் ரொவ்மன் பாவல் (36 பந்துகளில் 68 ரன், 4 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு டி20 அரையிறுதி ஆட்டத்தை நினைவுபடுத்தினர்.

(அந்த ஆட்டத்தில் இந்திய அணி 192 ரன் எடுத்திருந்தது; ஆனால் இரண்டாவதாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன் எடுத்து வென்றது).

ஆனால் இந்திய அணியின் அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களின் திறமையால் அணி வெற்றி பெற்றது. இத்துடன் இந்தத் தொடரையும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories