December 6, 2025, 9:42 AM
26.8 C
Chennai

கோலி அதிரடி அட்டகாசம்; 3வது போட்டியிலும் இந்தியா வெற்றி

கோஹ்லி 160 ரன்கள் விளாச, இந்தியா 303 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 303 ரன் குவித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் குயின்டன், மார்னே மார்கலுக்குப்பதில் கிளாசன், நிகிடி அறிமுக வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் டக்-அவுட்டானார். பின், இணைந்த தவான், கேப்டன் கோஹ்லி சிறப்பாக விளையாடியது. ஷிகர் தவான் அரை சதம் அடித்தார். டுமினி ‘சுழலில்’ தவான் (76) சிக்கினார். ரகானே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 34வது சதம் அடித்தார்.

ஹர்திக் பாண்ட்யா 14, தோனி 10 ரன்களில் திரும்பினர். ஜாதவ் ஒரு ரன் மட்டும் எடுத்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரில் அதிரடி காட்டிய கோஹ்லி ஒரு சிக்சர், பவுண்டரி விளாசி 150 ரன்களை கடந்தார். முடிவில், இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. கோஹ்லி (160), புவனேஷ்வர் (16) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக டுமினி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories