IND Vs ENG ஐந்தாவது டெஸ்டில் தலைநிமிர்த்திய ரிஷப் பந்த்

ind vs eng - 2026

இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் –
முதல் நாள் – 01 ஜூலை 2022 – பர்மிங்ஹாம், எட்பேஸ்டன்

– K.V. பாலசுப்பிரமணியன்

போன வருடம் கொரானாவால் நின்று போன இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க வேண்டிய ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்தில், பர்மின்காமில், எட்பேஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரொனா காரணமாக இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டனாக விளையாடினார்.

இந்திய அணிக்கு கவாஸ்கர், வெங்சார்க்கர் போன்ற பேட்ஸ்மென்கள் கேப்டனாக இருந்திருக்கிறார்கள்; பிஷன் சிங் பேடி, வெங்கட்ராகவன் போன்ற பவுலர்கள் (ஸ்பின் பவுலர்கள்) அணித்தலைவராக இருந்திருக்கிறார்கள்; கபில்தேவ் வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் அவர் ஒரு ஆல்ரவுண்டர் கேப்டன்; விக்கட்கீப்பர் தோனி கேப்டனாக இருந்திருக்கிறார்; ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாவது இதுவே முதல் முறை.

ரோஹித் ஷர்மா ஆடாததால் ஷுப்மன் கில்லுடன் யார் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் எனக் குழப்பம் இருந்தது. அவசரமாக மாயங்க் அகர்வால் இந்தியாவிலிருந்து இதற்காக இங்கிலாந்து சென்றார். இருப்பினும் ராகுல் ட்ராவிடின் முடிவுப்படி சேத்தேஷ்வர் புஜாரா ஷுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

ஆட்டம் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் மழையால் தாமதமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆட களம் இறங்கிய இந்திய அணியின் ஸ்டார் பேட்டர்கள் வழக்கம்போல் சொதப்பினார்கள். ஒருகட்டத்தில் 98/5 என்று அணியின் ஸ்கோர் இருந்தது.

டெஸ்ட் மேட்ச் வல்லுநர்கள் எனக் கருதப்படும் புஜாரா, ஹனுமான் விஹாரி, உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 98/5 என்ற ஸ்கோரிலிருந்து ஆட்டத்தின் முடிவில் 338/7 என்ற ஸ்கோரில் இன்றைய ஆட்டத்தை முடித்திருக்கிறது.

ரிஷப் பந்த் 146 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரவீந்த்ர ஜதேஜா 83 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். 73 ஓவர்களில் 338 ரன் என்பது ஒரு நல்ல ஸ்கோர். நாளையும் இன்று போல மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை ஜதேஜா சதம் அடிப்பாரா எனப் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories