IND Vs SA ODI: முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி, லக்னோ, 6 அக்டோபர் 2022

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணி (40 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 249 ரன், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 75 ரன், ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 74 ரன், டி காக் 48, ஷர்துல் தாகூர் 2/35) இந்திய அணியை (40 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 240 ரன், சஞ்சு சாம்சன் 86, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஷர்துல் தாகூர் 33, நிகிடி 3/52) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஷிகர் தவான் தலைமையிலான புதிய இந்திய அணி இன்று லக்னோவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அணி வீரர்கள் – ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய். மழை காரணமாக போட்டி தாமதமாக் தொடங்கியது.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இரண்டு அணிகளும் 40 ஓவர்கள் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஷர்துல் தாகூர் (ரன்ரேட் 4.37) மற்றும் ரவி பிஷ்னோய் (ரன்ரேட் 4.87) இருவரும் அதிகம் ரன் கொடுக்கவில்லை; விக்கட்டுகளும் எடுத்தனர்.

தொடக்க வீரர் மலான் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் பவுமா இரண்டு ஓவர் மட்டுமே ஆடி 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த மர்க்ரம் 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 23ஆவது ஓவரில் டி காக் (48 ரன்) ஆட்டமிழந்ததும் ஜோடி சேர்ந்த கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடி அணியின் ஸ்கோரை 249 ரன்னுக்கு எடுத்துச் சென்றனர்.

அடுத்து ஆடவந்த இந்திய அணிக்கு ஷிகர் தவன் (4 ரன்), சுப்மன் கில் (3 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (42 பந்துகளில் 19 ரன்), இஷான் கிஷன் (37 பந்துகளில் 20 ரன்) இருவரும் மிக மெதுவாக் ஆடினார்கள்; விரைவில் ஆட்டமிழந்தார்கள்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் (37 பந்துகளில் 50 ரன்), சஞ்சு சாம்சன் (ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 86 ரன்) ஷர்துல் தாகூர் (31 பந்துகளில் 33 ரன்) நன்றாக ஆடினர். இருப்பினும் மொத்தம் 240 ரன்களே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.

எனவே 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹென்றி கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories