IND Vs SA ODI: முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி, லக்னோ, 6 அக்டோபர் 2022

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணி (40 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 249 ரன், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 75 ரன், ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 74 ரன், டி காக் 48, ஷர்துல் தாகூர் 2/35) இந்திய அணியை (40 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 240 ரன், சஞ்சு சாம்சன் 86, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஷர்துல் தாகூர் 33, நிகிடி 3/52) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஷிகர் தவான் தலைமையிலான புதிய இந்திய அணி இன்று லக்னோவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அணி வீரர்கள் – ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய். மழை காரணமாக போட்டி தாமதமாக் தொடங்கியது.

இரண்டு அணிகளும் 40 ஓவர்கள் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஷர்துல் தாகூர் (ரன்ரேட் 4.37) மற்றும் ரவி பிஷ்னோய் (ரன்ரேட் 4.87) இருவரும் அதிகம் ரன் கொடுக்கவில்லை; விக்கட்டுகளும் எடுத்தனர்.

தொடக்க வீரர் மலான் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் பவுமா இரண்டு ஓவர் மட்டுமே ஆடி 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த மர்க்ரம் 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 23ஆவது ஓவரில் டி காக் (48 ரன்) ஆட்டமிழந்ததும் ஜோடி சேர்ந்த கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடி அணியின் ஸ்கோரை 249 ரன்னுக்கு எடுத்துச் சென்றனர்.

அடுத்து ஆடவந்த இந்திய அணிக்கு ஷிகர் தவன் (4 ரன்), சுப்மன் கில் (3 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (42 பந்துகளில் 19 ரன்), இஷான் கிஷன் (37 பந்துகளில் 20 ரன்) இருவரும் மிக மெதுவாக் ஆடினார்கள்; விரைவில் ஆட்டமிழந்தார்கள்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் (37 பந்துகளில் 50 ரன்), சஞ்சு சாம்சன் (ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 86 ரன்) ஷர்துல் தாகூர் (31 பந்துகளில் 33 ரன்) நன்றாக ஆடினர். இருப்பினும் மொத்தம் 240 ரன்களே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.

எனவே 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹென்றி கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories