IND Vs SA ODI: முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி, லக்னோ, 6 அக்டோபர் 2022

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணி (40 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 249 ரன், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 75 ரன், ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 74 ரன், டி காக் 48, ஷர்துல் தாகூர் 2/35) இந்திய அணியை (40 ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 240 ரன், சஞ்சு சாம்சன் 86, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஷர்துல் தாகூர் 33, நிகிடி 3/52) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஷிகர் தவான் தலைமையிலான புதிய இந்திய அணி இன்று லக்னோவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது.

அணி வீரர்கள் – ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய். மழை காரணமாக போட்டி தாமதமாக் தொடங்கியது.

இரண்டு அணிகளும் 40 ஓவர்கள் விளையாடும் எனத் தீர்மானிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஷர்துல் தாகூர் (ரன்ரேட் 4.37) மற்றும் ரவி பிஷ்னோய் (ரன்ரேட் 4.87) இருவரும் அதிகம் ரன் கொடுக்கவில்லை; விக்கட்டுகளும் எடுத்தனர்.

தொடக்க வீரர் மலான் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் பவுமா இரண்டு ஓவர் மட்டுமே ஆடி 15ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த மர்க்ரம் 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 23ஆவது ஓவரில் டி காக் (48 ரன்) ஆட்டமிழந்ததும் ஜோடி சேர்ந்த கிளாசன், டேவிட் மில்லர் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடி அணியின் ஸ்கோரை 249 ரன்னுக்கு எடுத்துச் சென்றனர்.

அடுத்து ஆடவந்த இந்திய அணிக்கு ஷிகர் தவன் (4 ரன்), சுப்மன் கில் (3 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (42 பந்துகளில் 19 ரன்), இஷான் கிஷன் (37 பந்துகளில் 20 ரன்) இருவரும் மிக மெதுவாக் ஆடினார்கள்; விரைவில் ஆட்டமிழந்தார்கள்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் (37 பந்துகளில் 50 ரன்), சஞ்சு சாம்சன் (ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 86 ரன்) ஷர்துல் தாகூர் (31 பந்துகளில் 33 ரன்) நன்றாக ஆடினர். இருப்பினும் மொத்தம் 240 ரன்களே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.

எனவே 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஹென்றி கிளாசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories