இந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது ஒருநாள் போட்டி, டெல்லி, 11.10.2022
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணியை ( 27.1 ஓவரில் 99 ரன், கிளாசன் 34, குல்தீப் 4/18, வாஷிங்டன் சுந்தர் 2/15, சிராஜ் 2/17, ஷாபாஸ் அகமது 2/32) இந்திய அணி (19.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 105 ரன், கில் 49, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 28) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இன்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவராக டேவிட் மில்லர் இருந்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் செய்த மாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன் கூட எடுக்க முடியாமல் 27.1 ஓவருக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன் எடுத்தது.
இந்த எளிதான இலக்கை இந்திய அணி மூன்றுவிக்கட் இழப்பிற்கு 105 ரன் என்ற கணக்கில் 19.1 ஓவருக்குள் எடுத்து வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் இது.
குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும் முகம்மது சிராஜ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்