IND Vs SL ODI: கோலி அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!


ind vs sl odi - 2026

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் ஆட்டம், கௌஹாத்தி, 10.01.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


இந்திய அணி (373/7, விராட் கோலி 113, ரோஹித் ஷர்மா 83, சுப்மன் கில் 70, ராகுல் 39, ஷ்ரேயாஸ் ஐயர் 28, ரஜிதா 3/88) இலங்கை அணியை (306/8, தசுன் ஷனகா 108*, நிசாங்கா 72, தனஞ்சயா 47, உம்ரான் 3/57, சிராஜ் 2/30) 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் சேர்த்திருந்த போது, சுப்மன் கில் (70) விக்கெட்டை இழந்தார். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் குவித்தார். ஸ்ரேயஸ் ஐயர் (28), கே.எல் ராகுல் (39) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (14) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மிக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். விராட் கோலிக்கு இது 73வது சதமாகும். அதே போல் கிட்டத்தட்ட 1100 நாட்களுக்கு பிறகு விராட் கோலி இந்திய மண்ணில் அடிக்கும் சதமும் இது தான்.

போட்டியின் 49வது ஓவர் வரை இலங்கை வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்த விராட் கோலி, 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 373 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதுஷான்கா, ஷனாகா, கருணாரத்னே மற்றும் டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இலங்கை அணி ஆடவந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் இரண்டு விக்கட்டுகள் விரைவாக வீழ்ந்தன. ஃபெர்னாண்டோ (5 ரன்), குசால் மெண்டிஸ் (ரன் எடுக்கவில்லை) ஆகியோர் ஆட்டமிழந்தபின்னர் நிசாங்கா அசல்ங்காவுடனும் (23 ரன்) தனஞ்சயாவுடனும் (47 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை சரிவிலிருந்து மீட்டார். அதன் பின்னர் 25ஆவது ஓவரில் விளையாட வந்த இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா (ஆட்டமிழக்காமல் 108 ரன்) இந்திய வெற்றியை தாமதப்படுத்தினார்.

வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்குரியதாகவே இருக்கிறது. கௌஹாத்தி மைதானம் பீட்டர்களுக்குச் சாதகமானது; இரண்டாம்பாதியில் பனிப்பொழிவு இலங்கை அணிக்குச் சாதகமாக இருந்தது என்று காரணங்கள் சொன்னாலும் பந்துவீச்சு இன்னும் நன்றாக இருக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories