IND Vs NZ ODI: 208 ரன் குவித்த சுப்மன் கில்; இந்தியா வெற்றி!

ind vs nz odi - 2026

இந்தியா நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத், 18.01.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (349/8, ஷுப்மன் கில் 208, ரோஹித் 34, சூர்யகுமார் 31, ஹார்திக் 28, ஷிப்லி 2/74, மிட்சல் 2/30) நியூசிலாந்து அணியை (49.2 ஓவரில் 337, பிரேஸ்வெல் 140, ஃபின் அலன் 40, சிராஜ் 4/46, குல்தீப் 2/43, ஷர்துல் 2/54) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் மட்டையாடிய இந்திய அணிக்கு தில் மற்றும் ரோகித் ஷர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோஹித் 34 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் .. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் முறையை 31 ரன்கள் மற்றும் 28 நாட்களில் ஆட்டம் இழந்தனர்.

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். இறுதிவரை சிறப்பாக ஆடி அவர் இந்தப் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இஸான் கிசானின் சாதனையை முறியடித்தார். இவர் இறுதியாக 148 பந்துகளில் 208 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார் இதில் 19 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரண்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது .

இதன் பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணியில் ஃபின் அலன் (40 ரன்), பிரேஸ்வெல் (140 ரன்), சாண்ட்னர் (57 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பிற வீரர்கள் சோபிக்கவில்லை. மைக்கேல் பிரேஸ்வெல்லின் அற்புதமான எதிர்-தாக்குதல் (78 பந்துகள், 140 ரன், 12 ஃபோர், 10 சிக்சர்) இந்த போட்டியை ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாற்றியது. அவர் ஒரு பந்தில் ஏறக்குறைய இரண்டு ரன்கள் எடுத்தார், நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும் மீதமுள்ள 20 ஓவர்களில் ஓவருக்கு 11 ரன் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. மறுமுனையில் சான்ட்னர் இருந்தார். பந்து வீச்சாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சரியாகப் பந்துவீசமுடியாமல் திணறினர். இது ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களைப் பயமுறுத்தியது.

அவர் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பயமின்றி களமிறங்கினார். பந்து வீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை சிராஜ் மற்றும் ஷமி மட்டுமே தங்கள் அனுபவத்துடனும் துல்லியத்துடனும் இந்தியாவை இறுதியில் வெற்றி பெற வைத்தனர்.

ஆட்ட நாயகனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இத்தொடரில் முன்னணியில் உள்ளது. அடுத்த போட்டி ராய்ப்பூரில் 21ஆம் தேதி நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories