December 5, 2025, 4:04 PM
27.9 C
Chennai

உலகக் கோப்பை கிரிக்கெட் (13): 2015 போட்டி!

2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின.

cricket wordl cup 2015 - 2025

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 13 – 2015 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின. மேலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டி இதுவாகும்.

இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியானது 14 அணிகளைக் கொண்டிருந்தது, அவை ஏழு குழுக்கள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தங்கள் குழுவில் விளையாடின.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைக் கொண்ட நாக் அவுட் நிலைக்கு முன்னேறின. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. குரூப் A பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றன.

இவற்றுள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேச அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின. குரூப் B பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாபே, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றுள் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.

காலிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணியை வென்றது; நியூசிலாந்து மேற்கு இந்தியத்தீவுகள் அணியை வென்றது; பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி வென்றது; இந்திய அணி வங்கதேசத்தை வென்றது. அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியையும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவையும் வென்றது.

இறுதிப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

குரூப் ஆட்டங்களில் இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானோடு நடந்த ஆட்டத்தில் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பேட்ஸ்மென்களில் ஷிகர் தவான் 8 மேட்சுகளில் 412 ரன் எடுத்தார்; இதில் இரண்டு செஞ்சுரிகள் அடக்கம். ரெய்னா, கோலி, ரோஹித் ஷர்மா தலா ஒரு செஞ்சுரி அடித்தனர். உமேஷ் யாதவ் 18 விக்கட்டுகளும் ஷமி 17 விக்கட்டுகளும் எடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories