IPL 2024: குஜராத்க்கு எதிராக பஞ்சாப் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிநாலாம் நாள்
ஐபிஎல் 2024 – 04.04.2024 – அகமதாபாத்
குஜராத் டைடன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

குஜராத் அணியை (199/4, ஷுப்மன் கில் 89*, சாய் சுதர்ஷன் 33, கேன் வில்லியம்சன் 26, ராகுல் திவாத்தியா 23, ரபாடா 2/44) பஞ்சாப் அணி (ஷஷாங்க் சிங் 61*, பிரப்சிம்ரன் சிங் 35, அஷுத்தோஷ் ஷர்மா 31, ஜானி பெயர்ஸ்டோ 22, நூர் அகமது 2/32) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா வழக்கம்போல இரண்டு அதிரடி ஷாட்டுகள் விளையாடிவிட்டு 11 ரன்னுக்கு மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் ஆட்டமிழக்காமம் 89 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) கேன் வில்லியம்சனுடனும் (22 பந்துகளில் 26 ரன்) சாய் சுதர்ஷனுடனும் (19 பந்துகளில் 33 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சாய் சுதர்ஷன் 13.5 ஓவரில் ஆட்டமிழந்தபோது விளையாட வந்த விஜய் ஷங்கர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கடைசியாக வந்த திவாத்தியா எட்டு பந்துகளில் 23 ரன் அடித்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்திருந்தது.

200 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இரண்டாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பெயர்ஸ்டோ 13 பந்துகளில் 22 ரன் அடித்து 5.1ஆவது ஓவரில் அவுட்டானார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

சாம் கரன் (5 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. பிரப்சிம்ரன் சிங் (24 பந்துகளில் 35 ரன்), சிக்கந்தர் ராசா (16 பந்தில் 15 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (8 பந்துகளில் 16 ரன்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆனால் 8.4ஆவது ஓவரில் ஆடவந்த ஷஷாங்க் சிங் (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) ஜித்தேஷ் ஷர்மா (16 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 19.5 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories