T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

IMG 20240630 WA0000 - 2026

டி-20 2024 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பிரிட்ஜ்டவுன் கெனிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. வழக்கம்போல விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா (ஐந்து பந்துகளில் 9 ரன், 2 ஃபோர்), ரிஷப் பந்த் (2 பந்துகளில் பூஜ்யம் ரன்) சூர்யகுமார் யாதவ் (4 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 45/3.

அதன் பின்னர் விராட் கோலியும் (59 பந்துகளில் 76 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) அக்சர் படேலும் (31 பந்துகளில் 47 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். அதன் பின்னர் ஷிவம் துபே (16 பந்துகளில் 27 ரன்) கடைசி ஓவரின் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். இவ்வாறு 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

இரண்டாவதாக தென் ஆப்பிரிக்க அணி விளையாட வந்தபோது மூன்று ஓவர் முடிவதற்குள் ஹெண்ட்ரிக்ஸ் (4 ரன்) மற்றும் மர்க்ரம் (4 ரன்) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் க்விண்டன் டி காக் (31 பந்துகளில் 39 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன்), கிளாசன் (27 பந்துகளில் 52 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறாவே அதிக வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை பெறவைத்தனர்.

இருந்தாலும் 16.1ஆவது ஓவரில் கிளாசன் (17 பந்துகளில் 21 ரன்) ஆட்டமிழக்கும்போது இன்னமும் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. 

18ஆவது ஓவரை பும்ரா வீசினார். அவர் 2 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட் எடுத்தார். அடுத்த ஓவரை அர்ஷ்தீப் வீசினார். அவர் அந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்தார்.

கடைசி ஓவரில் 16 ரன் கள் தேவைப்பட்டன. ஹார்திக் பாண்ட்யா பந்துவீச வந்தார். அப்போது டேவிட் மில்லர் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரடித்த ஒரு பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்தார். பேலன்ஸ் தவறியதால் அவர் பவுண்டரிக்கு வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் சமயோசிதமாக பந்தை மைதானத்திற்குள் வீசிவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று, பின்னர் மீண்டும் உள்ளே வந்து அந்த கேட்சைப் பிடித்தார்.

அதற்கடுத்த ஐந்து பந்துகளில் 8 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்கு 7 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றியையும் உலகக் கோப்பையையும் பெற்றுத்தந்தார்கள். 

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories