December 5, 2025, 1:50 PM
26.9 C
Chennai

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை – 25.04.2025

சென்னை அணியின் பரிதாபத் தோல்வி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.5 ஓவர்களில் 154, டிவால்ட் பிரிவிஸ் 42, ஆயுஷ் மஹத்ரே 30, தீபக் ஹூடா 22, ரவீந்த்ர ஜதேஜா 21, ஹர்ஷல் படேல் 4/28, பேட் கம்மின்ஸ் 2/21, உனத்கட் 2/21, ஷமி 1/28, மெண்டிஸ் 1/26) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (155/5, இஷான் கிஷன் 44, கமிண்டு மெண்டிஸ் 32, ட்ராவிஸ் ஹெட் 19, அனிகேத் வர்மா 19, நிதீஷ் குமார் ரெட்டி 19, நூர் அகமது 2/42, ஜதேஜா 1/22, கலீல் அகமது 1/21, அன்ஷுல் காம்போஜ் 1/16) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் மட்டையாட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் (பூஜ்யம் ரன்) முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த சாம் கரன் (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான

ஆயுஷ் மஹத்ரேயும் (19 பந்துகளில் 30 ரன்) ரவீந்தர் ஜதேஜாவும் (17 பந்துகளில் 21 ரன்) அனியின் ஸ்கோரை நிலைப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மஹத்ரே ஆறாவது ஓவரிலும் ஜதேஜா பத்தாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து, இன்று புதிதாகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (25 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஷிவம் துபே (9 பந்துகளில் 12 ரன்) வேகமாக ரன் சேர்க்க முயன்று அவுட் ஆயினர்.

தீபக் ஹூடா (21 பந்துகளில் 22 ரன்), தோனி (10 பந்துகளில் 6 ரன்), அன்ஷுல் காம்போஜ் (2 ரன்), நூர் அகமது (2 ரன்) ஆகியொர் ரன் அடிக்கத் திணறி ஆட்டமிழந்தனர்.

ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக நாலு விக்கட்டுகள் எடுத்தார். சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ரன் மட்டுமே எடுத்தது.

155 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி இரண்டாவது பந்தில் தனது தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை (பூஜ்யம் ரன்) இழந்தது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 19 ரன்) மற்றும் இஷான் கிஷன் (34 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) இணைந்து ஹைதராபாத் அணியின் சேஸிற்கு நம்பிக்கை அளித்தனர்.

அடுத்து வந்த ஹென்றி கிளாசன் (7 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அனிகேத் வர்மா (19 பந்துகளில் 19 ரன்) பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை. எனினும் கமிந்து மெண்டிஸ் (22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன், 3 ஃபோர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 2 ஃபோர்) ஹைதராபாத் அணியின் வெற்றியை 18.4 ஓவர்களில் உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஹர்ஷல் படேல் அறிவிக்கப்பட்டார்.

சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு இனிமேல் தகுதி பெற முடியாது. அதனால் இனி வரும் போட்டிகளில் சென்னை அணி அடுத்தவர்களின் வாய்ப்பை பறிக்கும் அணியாக இருக்குமே தவிர பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் அனியாக இருக்காது.

ஹைதராபாத் அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல இன்னமும் ஒரு மெல்லிய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories