IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை – 25.04.2025

சென்னை அணியின் பரிதாபத் தோல்வி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.5 ஓவர்களில் 154, டிவால்ட் பிரிவிஸ் 42, ஆயுஷ் மஹத்ரே 30, தீபக் ஹூடா 22, ரவீந்த்ர ஜதேஜா 21, ஹர்ஷல் படேல் 4/28, பேட் கம்மின்ஸ் 2/21, உனத்கட் 2/21, ஷமி 1/28, மெண்டிஸ் 1/26) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (155/5, இஷான் கிஷன் 44, கமிண்டு மெண்டிஸ் 32, ட்ராவிஸ் ஹெட் 19, அனிகேத் வர்மா 19, நிதீஷ் குமார் ரெட்டி 19, நூர் அகமது 2/42, ஜதேஜா 1/22, கலீல் அகமது 1/21, அன்ஷுல் காம்போஜ் 1/16) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் மட்டையாட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் (பூஜ்யம் ரன்) முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த சாம் கரன் (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

ஆயுஷ் மஹத்ரேயும் (19 பந்துகளில் 30 ரன்) ரவீந்தர் ஜதேஜாவும் (17 பந்துகளில் 21 ரன்) அனியின் ஸ்கோரை நிலைப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மஹத்ரே ஆறாவது ஓவரிலும் ஜதேஜா பத்தாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து, இன்று புதிதாகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (25 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஷிவம் துபே (9 பந்துகளில் 12 ரன்) வேகமாக ரன் சேர்க்க முயன்று அவுட் ஆயினர்.

தீபக் ஹூடா (21 பந்துகளில் 22 ரன்), தோனி (10 பந்துகளில் 6 ரன்), அன்ஷுல் காம்போஜ் (2 ரன்), நூர் அகமது (2 ரன்) ஆகியொர் ரன் அடிக்கத் திணறி ஆட்டமிழந்தனர்.

ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக நாலு விக்கட்டுகள் எடுத்தார். சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ரன் மட்டுமே எடுத்தது.

155 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி இரண்டாவது பந்தில் தனது தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை (பூஜ்யம் ரன்) இழந்தது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 19 ரன்) மற்றும் இஷான் கிஷன் (34 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) இணைந்து ஹைதராபாத் அணியின் சேஸிற்கு நம்பிக்கை அளித்தனர்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

அடுத்து வந்த ஹென்றி கிளாசன் (7 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அனிகேத் வர்மா (19 பந்துகளில் 19 ரன்) பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை. எனினும் கமிந்து மெண்டிஸ் (22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன், 3 ஃபோர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 2 ஃபோர்) ஹைதராபாத் அணியின் வெற்றியை 18.4 ஓவர்களில் உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஹர்ஷல் படேல் அறிவிக்கப்பட்டார்.

சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு இனிமேல் தகுதி பெற முடியாது. அதனால் இனி வரும் போட்டிகளில் சென்னை அணி அடுத்தவர்களின் வாய்ப்பை பறிக்கும் அணியாக இருக்குமே தவிர பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் அனியாக இருக்காது.

ஹைதராபாத் அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல இன்னமும் ஒரு மெல்லிய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories