IPL 2025: கடைசி கட்டத்தில் விறுவிறுப்பு சேர்க்கிறார்களாம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs டெல்லி – லக்னோ – 24.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (206/8, ஷ்ரேயாஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 44, ஜோஷ் இங்கிலிஷ் 32, பிரப்சிம்ரன் சிங் 28, முஸ்டாஃபிசுர் ரஹ்மான் 3/33, விப்ராஜ் நிகம் 2/38, முகேஷ் குமார் ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் 208/4, சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்கமல் 58, கருண் நாயர் 44, கே.எல். ராகுல் 35, டியு பிளேசிஸ் 23, செதிகுல்லா அடல் 22, ஸ்டப்ஸ் ஆட்டமிழக்கமல் 18, ஹர்பிரீத் ப்ரார் 2/41, மார்கோ ஜேன்சன், ப்ரவீண் துபே தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

அந்த அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரப் சிம்ரன் சிங் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர்)மூன்றாவதாகக் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ் (12 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து பவர்பிளே ஓவர்களில் 60 ரன் எடுக்க உதவினார்.

அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (34 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), நேஹல் வதேரா (16 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர்), ஷஷாங்க் சிங் (10 பந்துகளில் 11 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (16 பந்துகளில் 4 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 206 என்ற அளவிற்கு உயர்த்தினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

கே.எல். ராகுல் (21 பந்துகளில் 35 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்), ட்யூ பிளேசிஸ் (15 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), கருண் நாயர் (27 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), செதிகுல்லா அடல் (16 பந்துகளில் 22 ரன், 2 சிக்சர்), சமீர் ரிஸ்வி (25 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) ஆகியோர் நன்றாக ஆடி 19.3 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 208 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்னமும் நான்கு ஆட்டங்கள் மீதமுள்ளன.

நாளை, ஞாயிறு அன்று இரண்டு ஆட்டங்கள் (1) குஜராத் – சென்னை குஜராத் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தி இருக்கும்; (2) கொல்கொத்தா-ஹைதராபாத் – எந்த அணி வெற்றி பெற்றாலும் அதனால் தாக்கம் இல்லை; திங்கள் அன்று மும்பை-பஞ்சாப் – மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்;

ஒருவேளை பஞ்சாப் வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்தில் ஒன்றைப்பெறும்.

கடைசி ஆட்டம் லக்னோ-பெங்களூரு எந்த வெற்றி பெற்றாலும் தாக்கம் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories