December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs பெங்களூரு – லக்னோ – 23.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (231/6, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 94, அபிஷேக் ஷர்மா 34, அனிகேத் வர்மா 26, ஹென்றி கிளாசன் 24, ட்ராவிஸ் ஹெட் 17 ஷெப்பர்ட் 2/14, புவனேஷ் குமார், லுங்கி நிகிடி, சுயேஷ் ஷர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (19.5 ஓவர்களில் 189, பில் சால்ட் 62, விராட் கோலி 43, ஜிதேஷ் ஷர்மா 24, ரஜத் படிதர் 18, மாயங்க் அகர்வால் 11, கம்மின்ஸ் 3/28, ஈசன் மலிங்கா 2/37, உனத்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கட்) 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (10 பந்துகளில் 17 ரன், 3 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) கடைசி வரை ஆடி அணிக்கு வலு சேர்த்தார்.

பின்னர் வந்த வீரர்களான ஹென்றி கிளாசன் (24 ரன்), அனிகேத் வர்மா (26 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (4 ரன்), அபினவ் மனோகர் (12 ரன்), மற்றும் பாட் கம்மின்ஸ் (13 ரன்) இஷான் கிஷன் உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

பில் சால்ட் (32 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), விராட் கோலி (25 பந்துகளில் 43 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மயாங்க் அகர்வால் (10 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர்), ஜிதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர்.

ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அந்த சமயத்தில் அவர்களின் இரண்டு பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அடுத்த 26 பந்துகளில் 7 விக்கட்டுகளை எடுத்து, சன்ரைசர்ஸ் அணி அவர்களது வெற்றியைப் பறித்தனர். இறுதியில் பெங்களூரு அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சன்ரைசர்ஸ் அணியின் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்த வகையில் ஆட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories