IPL 2025: பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் தனிப்பட்ட வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம்-2 – 01.06.2025 – அகமதாபாத் – மும்பை vs பஞ்சாப்

ஐயரின் தனிப்பட்ட வெற்றி

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (203/6, சூர்யகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பெயிர்ஸ்டோ 38, நமன் திர் 37, ஹார்திக் பாண்ட்யா 15, ரோஹித் ஷர்மா 8, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2/43, கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டோயினிஸ், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (207/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87, நெஹல் வதேரா 48, ஜோஷ் இங்கிலீஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, அஷ்வினி குமார் 2/55, போல்ட், ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை அணி முதலில் மட்டையாட வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அகமதாபாத்தில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

மழை காரணமாக ஆட்டக்களத்தின் தன்மை மாறியிருக்குமோ என்ற அச்சத்தோடு பஞ்சாப் அணி களமிறங்க, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து பஞ்சாப் அணிக்கு நிம்மதியளித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

மற்றொரு தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (29 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

பெயர்ஸ்டோ ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (26 பந்துகளில் 44 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்), நமன் திர் (18 பந்துகளில் 37 ரன், 7 ஃபோர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          204 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் (21 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

இவர்களுக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இன்றைய ஆட்டத்தின் கதாநாயகன். பும்ரா வீசிய மிகச் சிறப்பான யார்க்கர்களைச் சமாளித்து, அவற்றை பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அனுப்பினார். அவருடன் இணைந்து நெஹல் வதேரா (29 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), சிறப்பாக ஆடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories