spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்: 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்தியா?..... லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா இந்தியா?….. லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம்

- Advertisement -

01 Aug 09 Cricketஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில் கோஹ்லி மட்டுமே சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, அஸ்வின், சமி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்தை பொருத்தவரை பேட்டிங்கில் சொதப்பினாலும் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், குரன் ஆகியோர் அசாத்தியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.

எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்றைய போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி பொதுவாக அணியில் ஆல்ரவுண்டர்கள் பந்து வீசுகின்றனர். சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் விக்கெட்டுகள் விழுவதில் கடினமான சூழல் ஏற்படும்போது சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் தேவை மிகவும் முக்கியமானது. தற்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் உள்ளார். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்காக, வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதில், 2014-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா, 2-ஆவது இன்னிங்ஸில் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.அதேவேளையில், குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே டி20, ஒரு நாள் போட்டிகளில் தடுமாறியதால் அவரை அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், டேவிட் மலான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ஆலிவர் போப், முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் இறங்க உள்ளார். பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக, மொயின் அலி அல்லது கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் ஆடவுள்ளனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe