ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இரட்டையர் பிரிவு போட்டியில் சவாண் சிங்க், பவன் டாட்டூ, ஓம் பிரகாஷ், சுக்மீட் சிங்க் இணை தங்கப்பதக்கத்தை வென்றது. இதுமட்டுமின்றி இரட்டையர் பிரிவு துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இரட்டையர் பிரிவு போட்டியில் ரோஹித்குமார், பகவான் சிங் இணை வெண்கலப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் ஒற்றையர் படகு போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலப்பதக்கம் வென்றார்.
மகளிர் பேட்மின்டன் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வா காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் பளுதூக்குதல் பங்கேற்ற சதீஷ்குமார் ஏமாற்றமளித்தார்.
இதன் மூலம் பதக்க பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இந்திய 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் உள்பட 21 பதக்கங்களை வென்றுள்ளது


