உலக துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் குர்பிரீத் சிங் வெள்ளி வென்றார்

04 Sep 15 kurpeeth singh - 2026

52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்தது.

இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பந்தயத்தில் 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் குர்பிரீத் சிங் 579 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் பாவ்லோ கோரோஸ்டைலோவ் (581 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், தென்கொரியா வீரர் கிம் ஜூன்ஹோங் (579 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்திய வீரர்கள் அமன்பிரீத் சிங், விஜய்குமார் ஆகியோர் முறையே 25–வது மற்றும் 26–வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தனர். இதன் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், அமன்பிரீத் சிங், விஜய்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4–வது இடமே பிடித்தது.

ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் விஜய்வீர் சித்து 572 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தென்கொரியா வீரர் லி குன்ஹியோக் (570 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், சீன வீரர் ஹாஜி ஹூ (565 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகள் பிரிவில் விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,695 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தென்கொரியா அணி (1,693 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கத்தையும், செக்குடியரசு அணி (1,674 புள்ளிகள்) வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.

இந்த போட்டியில் சீனா 20 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தென்கொரியா 11 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கம் வென்று 2–வது இடத்தையும், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கம் வென்று 3–வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories