அணி உரிமையாளருடன் மோதல் பஞ்சாப் அணியில் இருந்து விலகும் சேவாக்

03 Nov05 Dhin Sehwag - 2026
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இருந்து வந்தார். வீரர்களை ஏலத்தில் எடுப்பது முதல் அணியை வழிநடத்துவது வரை சேவாக் முக்கிய பங்காற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 160 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. ஆனால், ராகுல் தவிர்த்து மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட் ஆனதும் அணித்தலைவர் அஸ்வின் மூன்றாவது வீரராக களம் கண்டார். ஆனால், அவர் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

போட்டி முடிந்ததும் இதுதொடர்பாக சேவாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரீத்தி ஜிந்தா. அவர் கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை களமிறக்கியது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இதுபோல் ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சேவாக்-பிரீத்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம் தான் என்று கூறப்பட்டது.

இதனை உறுதிபடுத்தும் வகையில், கிரிக்கெட் குறித்து பிரீத்தி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என சேவாக் அணியின் ஏனைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எந்த ஒரு நல்ல விஷயமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். பஞ்சாப் அணியுடனான எனது தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணியின் இரண்டு தொடரில் வீரராகவும், 3 தொடரில் ஆலோசகராகவும் பணியாற்றினேன். அந்த அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories