February 21, 2026, 9:33 AM
25.6 C
Chennai

அணி உரிமையாளருடன் மோதல் பஞ்சாப் அணியில் இருந்து விலகும் சேவாக்

03 Nov05 Dhin Sehwag - 2026
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இருந்து வந்தார். வீரர்களை ஏலத்தில் எடுப்பது முதல் அணியை வழிநடத்துவது வரை சேவாக் முக்கிய பங்காற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 160 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. ஆனால், ராகுல் தவிர்த்து மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட் ஆனதும் அணித்தலைவர் அஸ்வின் மூன்றாவது வீரராக களம் கண்டார். ஆனால், அவர் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

போட்டி முடிந்ததும் இதுதொடர்பாக சேவாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரீத்தி ஜிந்தா. அவர் கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை களமிறக்கியது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இதுபோல் ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சேவாக்-பிரீத்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம் தான் என்று கூறப்பட்டது.

இதனை உறுதிபடுத்தும் வகையில், கிரிக்கெட் குறித்து பிரீத்தி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என சேவாக் அணியின் ஏனைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எந்த ஒரு நல்ல விஷயமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். பஞ்சாப் அணியுடனான எனது தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணியின் இரண்டு தொடரில் வீரராகவும், 3 தொடரில் ஆலோசகராகவும் பணியாற்றினேன். அந்த அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories