December 5, 2025, 5:50 PM
27.9 C
Chennai

அணி உரிமையாளருடன் மோதல் பஞ்சாப் அணியில் இருந்து விலகும் சேவாக்

03 Nov05 Dhin Sehwag - 2025
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இருந்து வந்தார். வீரர்களை ஏலத்தில் எடுப்பது முதல் அணியை வழிநடத்துவது வரை சேவாக் முக்கிய பங்காற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 160 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. ஆனால், ராகுல் தவிர்த்து மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட் ஆனதும் அணித்தலைவர் அஸ்வின் மூன்றாவது வீரராக களம் கண்டார். ஆனால், அவர் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

போட்டி முடிந்ததும் இதுதொடர்பாக சேவாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரீத்தி ஜிந்தா. அவர் கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை களமிறக்கியது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இதுபோல் ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சேவாக்-பிரீத்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம் தான் என்று கூறப்பட்டது.

இதனை உறுதிபடுத்தும் வகையில், கிரிக்கெட் குறித்து பிரீத்தி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என சேவாக் அணியின் ஏனைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘எந்த ஒரு நல்ல விஷயமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். பஞ்சாப் அணியுடனான எனது தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணியின் இரண்டு தொடரில் வீரராகவும், 3 தொடரில் ஆலோசகராகவும் பணியாற்றினேன். அந்த அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories