ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

04 Nov16 Dhin Womens cirkcket - 2026

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் 2 லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை வென்றது. கயானாவில் நேற்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்து அணி ஏற்கனவே 2 போட்டிகளில் தோற்றுள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இந்த ஜோடி அயர்லாந்து பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டது. இந்த ஜோடி 10 ஓவரில் 67 ரன் சேர்த்த நிலையில் மந்தனா 33 ரன் (29 பந்து, 1 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோட்ரிகஸ் 18 ரன் (12 பந்து) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும், அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 51 ரன், மந்தனா 33 ரன் எடுத்தனர்.

இதனையடுத்து 146 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே பி பிரிவில் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories