நாகர்கோவிலில் சோதனை! தீவிரவாதிகளுக்கு உதவிய செய்யதலி நவாஸ்,அப்துல் சமீம்?

house - 2026

தமிழகத்தில் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதில், தொடர்புடையதாகச் சொல்லப்படும் செய்யதலி நவாஸ் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நாகர்கோவிலை அடுத்த இளங்கடை பகுதியில் செய்யதலி நவாஸ் பதுங்கியிருப்பதாகவும் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் பதுங்கியிருப்பதாகவும் தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு ரகசியத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து, நாகர்கோவில் இளங்கடை பகுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவான எஸ்.ஐ.யூ (சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு) டி.எஸ்.பி சுப்பையா தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.

அதில் செய்யதலி நவாஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த தவ்ஃபீக் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. தவ்ஃபீக்கின் வீட்டில் அவரின் மனைவி இருந்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

மேலும் திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. ஆனால், இவர்கள் மூன்று பேரும் காவல்துறையிடம் சிக்கவில்லை.

இந்தச் சோதனையில் நெல்லையைச் சேர்ந்த சிறப்பு உளவுப்பிரிவு காவலர்களும் ஈடுபட்டனர்.

சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிபி.ஜே.பி மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி விவேகானந்தாபாறையில் நடக்கும் நூற்றாண்டு விழா வரும் 25-ம் தேதி நடக்கிறது.

அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை முன்னிட்டு தீவிரவாத தடுப்பு பிரிவான எஸ்.ஐ.யு. டி.எஸ்.பி தலைமையில் பழைய குற்றவாளிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அதில் பி.ஜே.பி. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது” என்றார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories