நாகர்கோவிலில் சோதனை! தீவிரவாதிகளுக்கு உதவிய செய்யதலி நவாஸ்,அப்துல் சமீம்?

house - 2026

தமிழகத்தில் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதில், தொடர்புடையதாகச் சொல்லப்படும் செய்யதலி நவாஸ் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நாகர்கோவிலை அடுத்த இளங்கடை பகுதியில் செய்யதலி நவாஸ் பதுங்கியிருப்பதாகவும் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் பதுங்கியிருப்பதாகவும் தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு ரகசியத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து, நாகர்கோவில் இளங்கடை பகுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவான எஸ்.ஐ.யூ (சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு) டி.எஸ்.பி சுப்பையா தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.

அதில் செய்யதலி நவாஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த தவ்ஃபீக் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. தவ்ஃபீக்கின் வீட்டில் அவரின் மனைவி இருந்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

மேலும் திருவிதாங்கோடு பகுதியில் அப்துல் சமீம் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. ஆனால், இவர்கள் மூன்று பேரும் காவல்துறையிடம் சிக்கவில்லை.

இந்தச் சோதனையில் நெல்லையைச் சேர்ந்த சிறப்பு உளவுப்பிரிவு காவலர்களும் ஈடுபட்டனர்.

சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிபி.ஜே.பி மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி விவேகானந்தாபாறையில் நடக்கும் நூற்றாண்டு விழா வரும் 25-ம் தேதி நடக்கிறது.

அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை முன்னிட்டு தீவிரவாத தடுப்பு பிரிவான எஸ்.ஐ.யு. டி.எஸ்.பி தலைமையில் பழைய குற்றவாளிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அதில் பி.ஜே.பி. மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது” என்றார்.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories