December 6, 2025, 7:30 AM
23.8 C
Chennai

கத்தியால் குத்தி கொடூரம்! கள்ளக்காதலி யின் கணவனை கொன்ற காதலன்!

murder 1 - 2025

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், மேலத் தெருவைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், அவர்களுக்குப் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஜோதிலட்சுமியின் அப்பா விபத்தில் சிக்கி காயமடைந்ததால், அவரை பார்த்துக் கொள்ள ஜோதிலட்சுமி மதுரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, கார்த்திக் என்பவருடன் ஜோதிலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.

manikandan - 2025

இதனைக் கண்டு பிடித்த மணிகண்டன், ஜோதிலட்சுமியை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால் அதனைக் கேட்காத ஜோதிலட்சுமி கார்த்திக் உடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தவில்லை.

இதனிடையே கார்த்திக், ஜோதிலட்சுமியின் அம்மாவிடம் தனக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இருப்பினும் அவர்களை வற்புறுத்திய கார்த்திக், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேராக மணிகண்டன் வீட்டுக்குச் சென்று, அவரது மாமனார் அவரை அழைப்பதாகப் பொய் சொல்லிக் கூட்டச் சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து மணிகண்டனின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து, ஜோதிலட்சுமியின் வீட்டுக்கு சென்ற கார்த்திக், உன் மருமகனைக் கொலை செய்து விட்டேன்.. இப்போது திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, மறுநாள் மணிகண்டனின் உடலை 7 தோப்பில் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அவரது உடல் 7 இடங்களில் கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

அதன் பின்னர் மணிகண்டனின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகி உள்ள கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணை அடைவதற்காக அவரது கணவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories