February 22, 2026, 12:40 PM
29.6 C
Chennai

கொரோனா: வெளியிலிருந்து வருபவர்களால் சேலத்தில் தொற்று!

corono test

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 35 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஒரே நாளில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து வருகை தந்த முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டி என மொத்தம் 5 பேருக்கு முதன்முதலில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

அடுத்தடுத்த நாள்களில் கணிசமாக நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர்களில் குணமடைந்த பலர் அவ்வப்போது அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடைசியாக சிகிச்சை பெற்று வந்த மூவரும் குணமடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று (மே 15) அவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதன்மூலம், சேலம் மாவட்டம் கொரோனா தொற்றாளர்கள் இல்லாத மாவட்டமாக மாறியதாக மாவட்ட ஆட்சியர் ராமன் பெருமிதத்துடன் கூறினார். அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், சுகாதாரப்பணிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டோ அல்லது பணி நிமித்தமாகவோ வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவோருக்கு அல்லது வேறு பணி நிமித்தமாக சேலத்திற்கு வருவோருக்கு மாவட்ட எல்லையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, பெத்தநாயக்கன்பாளையம் ஏகலைவா பள்ளி, மாதிரி பள்ளிகள், சங்ககிரி மாதிரி பள்ளி, ஆத்தூர் பாவேந்தர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு வெளியே இருந்து சேலத்திற்குள் நுழைந்தவர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், சனிக்கிழமை (மே 16) ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதேநேரம், சேலம் மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் யாருக்கும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாள்களாக உறுதிப்ப டுத்தப் படவில்லை.

புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்களில் சேலம் அம்மாபேட்டையில் பாபு நகரைச் சேர்ந்த இருவர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஒருவர், முகமதுபுறா தெருவைச் சேர்ந்த ஒருவர், பெரிய புதூரைச் சேர்ந்த ஒருவர், ஏஓஎஸ் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஒருவர், நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர், முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வீராணத்தில் ஒருவர் என சேலம் மாநகர பகுதிகளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் மேட்டூர் கருமலைக்கூடலில் ஒருவர், கொளத்தூரில் ஒருவர், கெங்கவல்லி செந்தாரப்பட்டியைச் சேர்ந்த ஒருவர், சார்வாய்புதூரைச் சேர்ந்த ஒருவர், ஓமலூர் மூங்கில்பாடியைச் சேர்ந்த ஒருவர், ஆத்தூர் சார்வாயைச் சேர்ந்த ஒருவர், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மேற்கூறிய அனைவருமே வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் என்பதும், அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சுகாதாரப்பணிகள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”சேலம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருபவர்களில் கடந்த சில நாள்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் சென்று திரும்பிய சேலத்து மக்கள்.

வெளியே இருந்து சேலத்திற்கு வரும் வாகனங்களை காவல்துறையினர் தீவிரமாக தணிக்கை செய்து, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். சுகாதாரத்துறை, மாநகராட்சி, உள்ளாட்சித்துறைகள் சுகாதாரத்துறையுடன் மிகுந்த ஒத்துழைப்பு தருவதால்தான் இதுபோன்ற புதிய தொற்றாளர்களை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக மாறவில்லை. அப்படியான பீதியோ, அச்சமோ தேவையில்லை. வெளியே இருந்து சேலத்திற்கு வருவோர் மாவட்ட, மாநகர எல்லைகளில் மடக்கி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டு யாரேனும் வந்திருந்தால் அதுபற்றி மக்கள், சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories