கூட்டாஞ்சோறு பொங்க அடுப்பை பற்ற வைத்த சிறுவன்! பரிதாப உயிரிழப்பு!

sriram - 2026

நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைக்க, அடுப்பை சானிடைசர் ஊற்றி பற்றவைத்து சிறுவன் உடலில் தீப்பற்றி உயிரிழந்த பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது.

நாம் சிறார்களாக இருக்கையில் நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறை நாட்களில் அல்லது கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு செல்லும் போது, அனைவரும் கூட்டாக சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவோம்.

ஒருவரின் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், பாத்திரம் என அனைவரும் உற்சாகமாக சமைத்து சாப்பிட்டு இருப்போம்.

இந்நிலையில், கூட்டாஞ்சோறு சமைக்க முயன்ற சிறுவன் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டுப்பேட்டை காமராஜ் நகர் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன்.

இவருக்கு ஸ்ரீராம் (வயது 13) என்ற மகன் இருக்கிறார். ஸ்ரீராம் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளான். சிறுவன் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளான்.

இதனையடுத்து, கூட்டாஞ்சோறு சமைக்க அடுப்பை பற்றவைக்க சானிடைசரை ஊற்றி அடுப்பை பற்ற வைத்துள்ளான். இதன்போது, சிறுவனின் மீது எதிர்பாராத விதமாக தீப்பிடிக்கவே, சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடி துடித்துள்ளான்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விரைந்து சென்று சிறுவனை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட முயன்ற சிறுவன் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories