திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அழைப்பு!

hindumunnani
hindumunnani

நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அறைகூவல் விடுப்பதாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். அதிலும் முருகன் திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடுவதுடன் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது மரபு ஆகும்.

அதன் அடிப்படையில் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணம் கருதி பிரிட்டீஷ் அரசாங்கம் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுத்துள்ளது. அதன் காரணமாக கோவிலின் முகப்பில் உள்ள இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றும் மோட்ச தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார்கள். தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இந்த நடைமுறை மாறி பழைய பாரம்பரியம் காக்கப்படவில்லை.

இதனை மாற்ற வேண்டும் என்றும், தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டமாக நடத்தி வருகிறது.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் மாவீரன் அட்வகேட் ராஜகோபாலன் பல ஆண்டுகள் தொடர்ந்து போராட்டத்திற்கு தலைமையேற்று போராடினார். மேலும் சட்டரீதியான போராட்டமும் நடத்தி மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார்.

ஆனால் துரதிருஷ்டமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்கவில்லை, பக்தர்களின் உணர்வுகளையும் ஏற்காமல் அலட்சியம் செய்து வருகிறது.

இந்நிலையை மாற்ற முருக பக்தர்கள் எல்லா தலங்களிலும் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவது போல முருகனின் முதல்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் மலைமீதான தீபத்தூணில் திருகார்த்திகை தீபத்தை ஏற்றிடுவோம் வாருங்கள் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

வழிபாடு நமது உரிமை. அதிலும் சட்டத்தின்படி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருகார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

எனவே வருகின்ற திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றிட முருக பக்தர்கள் பெருந்திரளாக வருகைதர வேண்டுகிறோம்.

தீபத்தூணில் தீபம் ஏற்றி நமது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவோம். இதற்கு முருகன் அடியார்கள், ஆன்மீக குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள், காவடி குழக்கள், ஆன்மீக பெரியோர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories