
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய டியோ 125 ஸ்கூட்டரை ரூ.83,400 விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பு டியோ ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது மேம்பட்ட பவர் ஸ்மார்ட் அம்சத்துடன் கூடிய புதிய 125 சிசி எஞ்சினுடன் புதிய வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.
டியோ 125 ஸ்கூட்டரில் ஐடிலிங்கில் ஸ்டாப் சிஸ்டம், என்ஜின் இன்ஹிபிட்டர் கொண்ட சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், இருக்கையைத் திறப்பதற்கும் வெளிப்புற எரிபொருள் மூடியைத் திறப்பதற்கும் மல்டி-ஃபங்ஷன் ஸ்விட்ச், 171 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுட்சுமு ஒடானி கூறுகையில், “ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் இளம் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது” என்றார்.
ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும் டியோ 125 ஸ்கூட்டரின் விலை ரூ.83,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.