December 11, 2025, 10:02 PM
25.5 C
Chennai

மாநில விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ரக பஸ்கள்!

new buses tnstc setc - 2025

தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையாக பழைய பஸ்களை புதிதாக பாடி கட்டி மஞ்சள் பெயிண்ட் அடித்து தமிழக சாலைகளில் பவனி வரச்செய்து வரும் நிலையில் புதிதாக பிஎஸ்‌6ரக பஸ்களைவாங்கி கூண்டு கட்டி அதற்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து இயக்கி வருகிறது.

இந்த நிலையில் தொலைதூர பயணிகளுக்கு சேவை செய்ய எஸ்இடிசிக்கு புதிதாக 200 பஸ்கள்‌வாங்கப்பட்டு கூண்டு கட்டி இளம் பச்சை கலர் அடித்து வந்துள்ள பஸ்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் இவ்ளோ வசதிகள் இருக்கிறது.

எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. புதிய பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பஸ்களில், பயணிகளுக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொலை தூரங்களுக்கு பேருந்துகளையே இயக்கி வருகிறது. எஸ்.இ.டிசி எனப்படும் இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, சேலம், திண்டுக்கல், திருச்செந்தூர் என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களுக்கும் எஸ்.இ.டி.சி சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும் உள்ளன. அந்த வகையில், புதிதாக பிஎஸ் 6 ரக பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்டதாக இந்த பேருந்துகள் உள்ளன.

கீழ் தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும். தற்போது அரசு பேருந்துகளில் ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலும் கீழே இருக்கைகளும் மேல் பகுதியில் படுக்கை வசதிகள் கொண்டதாகவே உள்ளது.

இதனால், வயதான பயணிகள், குழந்தைகளுடன் பயணம் செய்யும் பயணிகள் படுக்கைகளில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்துகளில் சிலவற்றில் கீழ் தளத்திலும் படுக்கை வசதி உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் உள்ளது.

அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை உள்ளன. இதன் மூலம் தொலை தூரம் செல்லும் பயணிகள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். விரைவில் வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதேபோல பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பேருந்துகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும், காருக்கு நிகரான தொழில்நுட்பம் கொண்டதாகவும் புதிய பேருந்துகள் உள்ளதாக ஒட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories